Just In
- 24 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!! காரணம் என்னவா இருக்கும்?
- 31 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டோல்கேட் கட்டண கொள்ளைக்கு விடிவு காலம் பிறக்கிறது? நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல மனு இதுதான்
எக்ஸ்பிரஸ்வே சாலைகள் தொடர்பான பொது நல மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் விரைவான பயணத்திற்காக இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் துரித கதியில் நடைபெற்றும் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் மீது வாகன ஓட்டிகளுக்கு எவ்விதமான அதிருப்தியும் கிடையாது. ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்கள்தான் வாகன ஓட்டிகளை பதற வைக்கின்றன.
தற்போதைய நிலையில் இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்களின் பர்ஸை பதம் பார்க்கும் விஷயமாகதான் டோல்கேட்களை வாகன ஓட்டிகள் பார்க்கின்றனர். பல்வேறு டோல்கேட்களில் விதிமுறைகளை ஒதுக்கி தள்ளி விட்டு கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
போதாக்குறைக்கு கழிப்பிடம், குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலத்தில் தேவைப்படக்கூடிய வசதிகள் எதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருப்பதில்லை என்பதும் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இவை எதுவுமே இல்லாமல் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதால்தான் டோல்கேட்கள் என்றாலே வாகன ஓட்டிகளுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கேஎம்பி எனப்படும் குண்ட்லி-மானேசர்-பாவெல் (KMP - Kundli-Manesar-Pawal), குண்ட்லி-காஸியாபாத்-பாவெல் எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிழக்கு வெளிவட்ட விரைவு சாலை (ஈஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) மற்றும் மேற்கு வெளிவட்ட விரைவு சாலை (வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே) ஆகிய எக்ஸ்பிரஸ்வேக்களில், பெட்ரோல் பங்க்குகள், கழிப்பிடங்கள், ஆம்புலன்ஸ், அவசர கால வசதிகள், உணவகங்கள், போலீஸ் ரோந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI - National Highway Authority of India) உத்தரவிட வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் சாஹ்னி என்பவர் இந்த பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில், ''வெஸ்டர்ன் பெரிபெரல் எக்ஸ்பிரவே சாலையை தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து வருவதாகவும், ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத சூழலிலும், டோல்கேட் கட்டணங்களை செலுத்தி வருவதாகவும்'' குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி அனூப் ஜெய்ராம் பாம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதுதவிர ஹரியானா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகமும் (HSIIDC - Haryana State Industrial and Infrastructure Development Corp Ltd) இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே நாடு முழுக்க உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் எண்ணம். நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் தலையீட்டின் பேரிலாவது இந்த பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!