Just In
- 6 min ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 5 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 5 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 6 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரூ.2,750 கோடியில் பிரதமர் மோடிக்கு புதிய சொகுசு விமானம்... விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!
பிரதமர் மோடிக்கான புதிய போயிங் 777 சொகுசு விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வெளிநாட்டு பயணங்களுக்காக இரண்டு போயிங் 747 -400 ஜம்போ விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை ஏர்இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. விவிஐபி பயணங்களின்போது இந்திய விமானப்படையை சேர்ந்த பயிற்சி பெற்ற மூத்த பைலட்டுகள் இயக்குகின்றனர்.
விவிஐபி பயணம் முடிவடைந்ததும், இந்த விமானங்களின் இருக்கைகள் மாற்றப்பட்டு, வர்த்தக ரீதியில் பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படுகின்றன. இருக்கைகளை மாற்றுவதற்காக ஏர் இந்தியா நிறுவனம் 12 நாட்களை செலவிடுகிறது. மேலும், இந்த விமானங்கள் வாங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பிரதமர் உள்ளிட்டோர் அமெரிக்கா உள்ளிட்ட நீண்ட தூர நாடுகளுக்கு பயணிக்கும்போது எரிபொருள் நிரப்புவதற்காக இடையில் நின்று செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், பயண நேரம் அதிகரிப்பதோடு, பாதுகாப்பு பிரச்னைகளும் எழுகின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் அதிகம் இருப்பதையடுத்து, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, 2016ம் ஆண்டு இரண்டு போயிங் 777-300 இஆர் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. ஒவ்வொரு விமானமும் தலா ரூ.2,100 கோடி மதிப்புடையது. கடந்த 2018 ஆண்டு ஜனவரியில் போயிங் நிறுவனத்திடமிருந்து இந்த விமானங்கள் டெலிவிரி பெறப்பட்டப்பட்டன.
விவிஐபி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், பல்வேறு மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சேர்ப்பதற்காக மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு விமானங்களிலும் தற்போது கஸ்டமைஸ் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த விமானங்களின் கஸ்டமைஸ் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த விமானங்களில் விவிஐபி பயன்பாட்டிற்கான ஆலோசனை கூடம், சமையலறை, படுக்கையறை, சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், சிறிய ரத்த வங்கி ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கும்.
உயர் அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான இருக்கை வசதிகளும் உண்டு. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் வைக்கப்பட்டு இருப்பார்கள். உதவிக்கான பணியாளர்களும் இந்த விமானத்தில் இருப்பார்கள். இந்த விமானத்தில் 2,000 பேருக்கான உணவுப் பொருட்களை வைப்பதற்கான வசதியும் உள்ளது..
மேலும், இந்த விமானங்களில் சேட்டிலைட் தொலைபேசி வசதி, பிரதமருக்கான தனி அலுவலகம், 19 டிவி திரைகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டு இருக்கும். மொத்தத்தில் பறக்கும் நட்சத்திர விடுதிக்குரிய அனைத்து வசதிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இந்த இரண்டு விமானங்களுக்குமான உயர் கவச பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதியளித்தது. இதன்மூலமாக, விமானத்தில் ஏவுகணை முறியடிப்பு நுட்பம், கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் ஏவுகணையை செலுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை பெறும்.
அணு கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து தப்புவதற்கான கட்டமைப்பு தொழில்நுட்பமும், அவசர காலங்களில் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியும் இந்த விமானங்களில் இடம்பெற்றிருக்கும். ரூ.1,500 கோடி மதிப்பில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பம் வாங்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ரூ.6,000 கோடி மதிப்பீட்டில் இந்த இரண்டு புதிய விவிஐபி போயிங் 777-300 இஆர் விமானங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. போயிங் 747 விமானம் விவிஐபி பயணங்கள் இல்லாதபோது சாதாரண பயணிகள் சேவையில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், புதிய போயிங் 777- 300இஆர் விமானங்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட மாட்டாது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பயணங்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்படும். ஏர் இந்தியா ஒன் என்ற குறியீட்டுப் பெயரில் இந்த விமானங்கள் இயக்கப்படும். இந்த இரண்டு விமானங்களின் பராமரிப்புப் பணிகளை ஏர் இந்தியா மேற்கொள்ள இருக்கிறது.
இந்த விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படை பைலட்டுகளுக்கு அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் முதல் விமானமும், அடுத்த ஒரு மாதத்தில் மற்றொரு விமானம் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய பயணிகளில் விமானங்களில் ஒன்று போயிங் 777- 300 இஆர் மாடல். இந்த விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 13,650 கிலோமீட்டர் தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் வாய்ந்தது. சாதாரண போயிங் 777 விமானத்தில் 396 பயணிகள் வரை செல்ல முடியும். ஆனால், பிரதமரின் விமானத்தின் உட்புறம் முழுமையாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும்.
பொதுவாக விவிஐபி பயன்பாட்டிற்கு நான்கு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்கள்தான் வாங்கப்படும். ஆனால், இந்த விமானம் இரண்டு எஞ்சின்கள் கொண்டது. இந்த எஞ்சின்கள் உலகின் சக்திவாய்ந்த விமான எஞ்சின்களில் ஒன்று. அதிகபட்சமாக 513 கேஎன் த்ரஸ்ட் விசையை வாரி வழங்கும் திறன் வாய்ந்தது. மேலும், மிக மிக நம்பகமான எஞ்சின்களாக பெயர் பெற்றிருக்கின்றன.
இந்த விமானத்தை இரண்டு பைலட்டுகள் இயக்க முடியும். மணிக்கு அதிகபட்சமாக 945 கிமீ வேகம் வரை செல்லும். சராசரியாக 892 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இதனால், நீண்ட தூர பயணங்களை சுலபமாக முடிக்க இந்த விமானங்கள் உதவும்.
-
கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க