Just In
- 37 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 3 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 5 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?
ராயல் என்பீல்டு பைக்குகளை போக்குவரத்து போலீஸார் வலை விரித்து வேட்டையாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் நிலவி வருகின்றது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ரம்மியமான தோற்றத்தை பெற்றிருப்பதாலும், அதன் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தின் காரணமாகவும், அதன்மீது மதிமயங்கிய இளைஞர்கள், அதற்கான சந்தையை குறைவில்லாமல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தைக் காட்டிலும் அதிக சப்தத்தை எழுப்பும் வகையிலான சைலென்சர்களை இளைஞர்கள் சிலர் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது தற்போதைய சூழலில் குற்றமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆகையால், போக்குவரத்து போலீஸார் கடும் கெடுபிடியுடன், மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், அதன் உரிமையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், மாடிஃபை சைலென்சர்களை பொருத்திய வாகனங்கள் வேட்டையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போலீஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களையே அதிகம் பறிமுதல் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஈடி ஆட்டோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
ஹைதராபத்தில் உள்ள ராமகுண்டம் நகர போலீஸார்தான் இந்த தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், இதனை வித்தியாசமான முறையில் கையாண்டு வருகின்றனர். அந்தவகையில், சாலையில் மெக்கானிக்குடன் காத்திருக்கும் போலீஸார், அப்போது சாலையில் அதிகம் சப்தத்துடன் வருகின்ற வாகனங்களை மடக்கி, உடனடியாக அதன் சைலென்சர்களை அதிலிருந்து நீக்குகின்றனர்.
அதிலும் முக்கியமாக ராயல் என்பீல்டு பைக்குகளை கண்டாலே, அதனை மடக்கி போலீஸார் பரிசோதிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அதிக சப்தத்தோடு வரும் ராயல் என்பீல்டு பைக்குகளைப் மடக்கி, உடனடியாக அதில் மாடிஃபை செய்த சைலென்சரை போலீஸார் கழட்டுகின்றனர்.
பின்னர், அந்த பைக்கின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்த தகவலையும் ஆர்டிஓ அலவலகத்திற்கும் கொடுக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்று கெடுபிடியான நடவடிக்கையில், அண்மைக் காலங்களாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது தெலங்கானாவும் இணைந்துள்ளது. அதேசமயம், இந்த மாநில போக்குவரத்து போலீஸார், இ-செலான் அபராதத் தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கி வந்தனர்.
இந்நிலையில்தான், தற்போது அதிரடி வேட்டையாக மாடிஃபை வாகனங்கள்மீது தங்களின் பார்வையை செலுத்தியுள்ளனர். வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாகதான் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனை உறுதி செய்யும்விதமாக, அண்மையில் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. அதில், "மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.
மாடிஃபை சைலென்சர்களில் இருந்து வெளிவரும் சப்தங்களால் சாலையில் செல்லும் சக பயணிகள், பாதசாரிகள் உட்பட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், பறவைகள் மற்றும் விலங்குகளே இதனால், அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஆகையால், இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையிலேயே, கேரள, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மாடிஃபை வாகனங்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து வருகின்றனர்.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!