Just In
- 22 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பறிமுதல் செய்த சைலென்சர்களை வைத்து போலீஸார் செய்த காரியத்தை பார்த்தீங்களா?
போலீஸார் வைத்த வித்தியாசமான அறிவிப்பு பலகையைப் பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் கடுப்பாகியுள்ளனர். அவர்கள் கோபமடைவதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெருகி வருகின்றது. ஆனால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இது குற்றமாகும்.
வாகனங்களை மாடிஃபை செய்வதினால், அந்த வாகனம் அதன் உண்மையான தோற்றத்தை இழுக்கின்றது. அத்துடன், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுடன் ஒப்பிடுகையில், அது முரண்பாடுடையதாக மாறுகின்றது. இதன்காரணமாகவே, மாடிஃபை வாகனம் விவகாரத்தில் அரசு கடுமையான கெடுபிடியைக் காட்டி வருகின்றது.
அதேபோன்று, ஆஃப்டர் மார்கெட் எக்சாஸ்ட் சிஸ்டம் எனப்படும் வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கப்படும் சைலென்சர்களுக்கு எதிராகவும் போலீஸார் அண்மைக் காலங்களாக போர்க் கொடியை தூக்கி வருகின்றனர்.
பெரும்பாலும் ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன. இந்திய சட்ட திட்டத்தின்படி இரு சக்கர வாகனத்தின் சைலென்சர்கள் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிலான ஒலியையே வெளியேற்ற வேண்டும்.
ஆனால், ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பெரும்பாலான சைலென்சர்கள் 140 டெசிபலுக்கும் அதிகமான சப்தத்தை வெளியேற்றுகின்றன.
இந்த அதிக சப்தம், காற்றை மாசு செய்வதுடன், பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்த அமைகின்றது. மேலும், அதிலிருந்து வெளிவரும் அதிக ஒலி கேட்கும் திறனை பாதிக்கச் செய்கின்றது.
ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமாக போலீஸார் அண்மைக் காலங்களாக, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்தும் வாகனங்களை மடக்கி, அவற்றை பறிமுதல் செய்து, அங்கேயே அழித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகர போலீஸார், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை அவர்கள் சமீப காலமாக எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், பல வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்கு பதிந்து, அந்த பைக்குகளில் இருந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் நீக்கியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த சைலென்சர்களைக் கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குகின்ற வகையிலான பதாகை ஒன்றை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
தற்போது, அந்த பதாகைகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, இந்த சட்டவிரோத சைலென்சர்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை தரையில் போட்டு ஜேசிபி கிரேன் வாகனங்கள் மூலம் அழித்து வந்தனர்.
தற்போது, அந்த சைலென்சர்களைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கும் பலகையை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
அந்த பதாகையில், "சாலை விதிகளை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்...
ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை ஏதுவும் இல்லை. ஆனால், அவற்றை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை, பிரத்யேகமான ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவற்றை பொதுசாலையில் பயன்படுத்தினால், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Source: Gaadiwaadi, Nizam Bilal Davangere Bilal Davangere.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?