Just In
- 31 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- Movies இளையராஜா பயோபிக்.. தனுஷ் போட்டிருக்கும் பிளான் இதுவா?.. 100 கோடியாம் ப்பு.. பரபர தகவல்
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பறிமுதல் செய்த சைலென்சர்களை வைத்து போலீஸார் செய்த காரியத்தை பார்த்தீங்களா?
போலீஸார் வைத்த வித்தியாசமான அறிவிப்பு பலகையைப் பார்த்து வாகன ஓட்டிகள் சிலர் கடுப்பாகியுள்ளனர். அவர்கள் கோபமடைவதற்கான காரணத்தை விரிவாக இந்த பதிவில் காணலாம்.
வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெருகி வருகின்றது. ஆனால், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இது குற்றமாகும்.
வாகனங்களை மாடிஃபை செய்வதினால், அந்த வாகனம் அதன் உண்மையான தோற்றத்தை இழுக்கின்றது. அத்துடன், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுடன் ஒப்பிடுகையில், அது முரண்பாடுடையதாக மாறுகின்றது. இதன்காரணமாகவே, மாடிஃபை வாகனம் விவகாரத்தில் அரசு கடுமையான கெடுபிடியைக் காட்டி வருகின்றது.
அதேபோன்று, ஆஃப்டர் மார்கெட் எக்சாஸ்ட் சிஸ்டம் எனப்படும் வெளிப்புற சந்தையில் இருந்து வாங்கப்படும் சைலென்சர்களுக்கு எதிராகவும் போலீஸார் அண்மைக் காலங்களாக போர்க் கொடியை தூக்கி வருகின்றனர்.
பெரும்பாலும் ஆஃப்டர் மார்க்கெட் லைசென்சர்கள், அரசு நிர்ணயித்துள்ள அளவை காட்டிலும் அதிக ஒலியை உமிழ்கின்றன. இந்திய சட்ட திட்டத்தின்படி இரு சக்கர வாகனத்தின் சைலென்சர்கள் அதிகபட்சமாக 80 டெசிபல் அளவிலான ஒலியையே வெளியேற்ற வேண்டும்.
ஆனால், ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்பனையாகும் பெரும்பாலான சைலென்சர்கள் 140 டெசிபலுக்கும் அதிகமான சப்தத்தை வெளியேற்றுகின்றன.
இந்த அதிக சப்தம், காற்றை மாசு செய்வதுடன், பிற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு அச்சுறுத்த அமைகின்றது. மேலும், அதிலிருந்து வெளிவரும் அதிக ஒலி கேட்கும் திறனை பாதிக்கச் செய்கின்றது.
ஆகையால், இதனைத் தவிர்க்கும் விதமாக போலீஸார் அண்மைக் காலங்களாக, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களைப் பயன்படுத்தும் வாகனங்களை மடக்கி, அவற்றை பறிமுதல் செய்து, அங்கேயே அழித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகர போலீஸார், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை அவர்கள் சமீப காலமாக எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், பல வாகன ஓட்டிகளுக்கு எதிராக வழக்கு பதிந்து, அந்த பைக்குகளில் இருந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை அவர்கள் நீக்கியுள்ளனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த சைலென்சர்களைக் கொண்டு, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குகின்ற வகையிலான பதாகை ஒன்றை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
தற்போது, அந்த பதாகைகுறித்த புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, இந்த சட்டவிரோத சைலென்சர்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை தரையில் போட்டு ஜேசிபி கிரேன் வாகனங்கள் மூலம் அழித்து வந்தனர்.
தற்போது, அந்த சைலென்சர்களைப் பயன்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கும் பலகையை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
அந்த பதாகையில், "சாலை விதிகளை கடைபிடியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்தை நீங்கள் கீழே காணலாம்...
ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை ஏதுவும் இல்லை. ஆனால், அவற்றை பொதுவெளியில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை, பிரத்யேகமான ரேஸிங் டிராக்குகள் மற்றும் தனியார் இடங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மாறாக அவற்றை பொதுசாலையில் பயன்படுத்தினால், அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Source: Gaadiwaadi, Nizam Bilal Davangere Bilal Davangere.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு