Just In
- 33 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 52 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 3 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
Don't Miss!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Movies Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் போலீஸ்... இந்த வீடியோவை பார்த்தால் இனி வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டீங்க
வெளியில் வருபவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கோவிட்-19 இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இம்முறை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், கோவிட்-19 வைரஸ் பரவலை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் மூலம் மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவது தவிர்க்கப்பட்டு, கோவிட்-19 வைரஸ் பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவுகளை முழுமையாக நிறைவேற்றுவதற்காக காவல் துறையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக சில தனித்துவமான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இங்கே கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அரசு 'ரெட் அலர்ட்' பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி அத்தியாவசியமான கடைகள் சில மணி நேரங்களுக்கு திறந்திருக்கலாம்.
ஆனால் உரிய காரணம் இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது. எனினும் யாராவது தேவையில்லாமல் வெளியே வருகிறார்களா? என்பதை கண்காணிக்கவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த காவல் துறையினர் தனித்துவமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே வருபவர்களை பிடிப்பதற்காக போலீஸ் படையினர் காத்திருப்பதை இந்த வீடியோவில் காண முடிகிறது. பைக்கில் ஒரு சிலர் வருவதை பார்த்ததும், அவர்களை நோக்கி போலீஸ் படையினர் விரைகின்றனர். இதில், ஒரு பைக் ரைடர் முதல் முறை தப்பித்து விடுகிறார். ஆனால் இரண்டாவது முறை சிக்கி கொள்கிறார்.
அதே நேரத்தில் பைக்கில் வந்து சிக்கிய நபர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தூக்கி செல்கின்றனர். அவர்களுக்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பைக் ரைடர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக ஆம்புலன்சுக்கு உள்ளே செல்ல கட்டாயப்படுத்துகின்றனர்.
அதே சமயம் பைக் ரைடர்களோ ஆம்புலன்ஸில் இருந்து தப்பித்து செல்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்கின்றனர். இதில், ஒரு பைக் ரைடர் ஆம்புலன்ஸ் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயல்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. புதிய விதிமுறைகளின்படி, தேவையில்லாமல் வெளியே வந்து யாராவது சிக்கினால், அவர் தனிமைப்படுத்தப்படுவார்.
அத்துடன் அவர்களின் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோவிட்-19 இல்லை என்பது தெரியவந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த வீடியோவில் சிக்கிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா? என்பது தெரியவில்லை. இதற்கு முன்பாக விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால் அப்போதும் பொதுமக்கள் பலர் விதிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கைகளை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் இப்படி திடீரென பிடித்து வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றுவது பயத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதன் மூலம் நிலைமையின் தீவிரத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் புரிந்து கொள்வார்கள் எனவும், வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியே வருவது எவ்வளவு அபாயகரமானது? என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்கள் பயப்படுவார்கள்தான்.
ஆனால் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இது காவல் துறையினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதை மறுத்து விட முடியாது. எனினும் ஜோத்பூர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. நியூஸ்18 வைரல்ஸ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
-
ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!