Just In
- 42 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உத்தர பிரதேசத்தில் அடாவடி... ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன அரசியல் பிரமுகர் செய்த காரியம்... என்னனு தெரியுமா?
உத்தர பிரதேசத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை. எனினும் இந்த விஷயத்திற்கு அரசியல் தலைவர்கள் உள்பட ஒரு சிலர் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதற்கு மாறாக அவர்கள் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிர் தர்மேந்திரா யாதவும் ஒருவர்.
இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 4ம் தேதி சிறையில் இருந்து பெயிலில் விடுவிக்கப்பட்டார். தர்மேந்திர யாதவை அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வரவேற்றனர். அத்துடன் வாகன அணிவகுப்பில் அவருடன் இணைந்து பயணம் செய்தனர். இது தொடர்பாக 34 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் 24 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஆடி க்யூ3 காரும் ஒன்று. இது எஸ்யூவி ரக கார் ஆகும். தர்மேந்திர யாதவை இந்த காரைதான் பயன்படுத்தினார். தர்மேந்திர யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, வாகனங்களை காவல் துறையினர் கடந்த ஞாயிற்று கிழமையன்று பறிமுதல் செய்தனர்.
தர்மேந்திர யாதவ் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன், அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அவருடன் வாகன அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இதை தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனங்களில் அணிவகுத்து வந்தபோது, தர்மேந்திர யாதவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை ஒட்டுமொத்தமாக 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வீடியோவில் வாகனங்களின் பதிவு எண் பதிவாகியிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் இன்னமும் பாதிப்பு முழுமையாக குறைந்து விடவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுவோரின் வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
எனவே அவசியம் இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் காவல் துறையினரின் நடவடிக்கைகளில் இருந்து மட்டுமல்லாது, கொரோனா வைரஸின் பிடியில் இருந்தும் நீங்கள் தப்பிக்கலாம். அதே நேரத்தில் அத்தியாவசியமாக வெளியே செல்வதாக இருந்தாலும், முக கவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்.