பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

மும்பையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தன் உறவினருடன் பைக்கில் செல்லும் போது மழை நீரால் மறைந்திருந்த குழியில் விழுந்ததில் எதிர்பாராத விதமாக பஸ்சின் வீலில் விழுந்தார்.

By Balasubramanian

மும்பையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் தன் உறவினருடன் பைக்கில் செல்லும் போது மழை நீரால் மறைந்திருந்த குழியில் விழுந்ததில் எதிர்பாராத விதமாக பஸ்சின் வீலில் விழுந்தார். இதனால் பஸ் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகியுள்ளார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் மனி

ஷா போஹிர், இவர் தானே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கிவர் கடந்த வெள்ளிக்கிழைமை பள்ளி முடிந்ததும் தனது உறவினர் ஒருவருடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் மழை பெய்ததால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரும் தொய்வு ஏற்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை வரை பெய்த மலையின் அளவு 100 மிமீ என வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

இந்நிலையில் பைக்கில் உறவினர் ஒருவருடன் வீடு திரும்பும் போது ரோடுமுழுவதும் தண்ணீரால் சூழ்ந்து இருந்தது. பல வாகனங்கள் அப்பகுதியில் தண்ணீரில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்பொழுது திடீர் என மனிஷா சென்ற பைக்கின் முன் பக்க வீல் ரோட்டில் இருந்த ஒரு ஓட்டையில் சிக்கியது. இதனால் நிலை தடுமாறிய மனிஷமா மற்றும் அவரது உறவினர் வலது புறமாக கீழே விழுந்தனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

அவர்கள் கீழே விழும் அதே சமயத்தில் அந்த பகுதி வழியாக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இவர்கள் தடுமாறி விழுந்ததில் மனிஷா அந்த பஸ்சின் பின்புறம் வீலின் அருகே தடுமாறி விழுந்தார்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

இவர் விழுந்தது தெரியாமல் டிரைவர் தொடர்ந்து பஸ்சை தொடர்ந்து இயக்க அது மனிஷா மீது ஏறி இறங்கியது. இதனால் மனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த அவரது உறுவினர் மனிஷா எழுப்ப முயன்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை கீழே காணுங்கள்.

இந்த விபத்து ரோட்டில் தண்ணீர் குழிகளில் தேங்கி இருந்தததால் நிகழ்ந்துள்ளது. மும்பையில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இந்த மாதிரியான விபத்துக்களில் மரணங்கள் நிகழ்கிறது.

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண்; பஸ் வீல் ஏறி துடிதுடித்து பலியான பரிதாபம்- வீடியோ

மழைக்காலம் துவங்கும் முன்னரே அரசு உள்ளாட்சி அமைப்புகளை வைத்து இது போன்று மோசமாக உள்ள ரோடுகளை தற்காலிகமாகவாவது சரி செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்து

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #விபத்து #accident
English summary
On CCTV, Woman On Bike Dies After Hitting Pothole Near Mumbai. Read in Tamil
Story first published: Monday, July 9, 2018, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X