Just In
- 57 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு
ஒழுங்காக சாலை அமைக்காத இன்ஜினியர் மற்றும் காண்ட்ராக்டருக்கு மக்கள் சுகானுபவத்தை கொடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது பெரும் பிரச்னையாக மாறி கொண்டுள்ளது. இது ஒரு மாநிலத்திற்கான பிரச்னை மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளன. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அனைவரும் இனி போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.
எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வாகன ஓட்டிகளோ, ''சாலைகளை முதலில் ஒழுங்காக அமைத்து விட்டு இது போன்று அபராதம் விதியுங்கள். போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமல்லாது, மோசமான சாலைகளும் கூட விபத்துக்களுக்கு முக்கியமான காரணம்தான்'' என தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக சாலைகள் மோசமாக இருந்தால் அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, இல்லாவிட்டால் சிறிதாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது ஆகியவைதான் நமது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் கோவா மாநில மக்கள் வழக்கத்திற்காக மாறாக அதிரடியான ஒரு காரியத்தை செய்துள்ளனர். அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவாவின் கான்கோனா பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்து வருகின்றன. சாலைகள் மோசமாக இருந்த காரணத்தால், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சிதிலமடைந்த சாலைகளை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
உள்ளூர் மக்கள் சிலர் ஒன்று திரண்டு, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வென்ற காண்ட்ராக்டரை, பொதுப்பணித்துறை இன்ஜினியர் அழைத்தார். காண்ட்ராக்டர் வந்ததும், சாலைகளை சரி செய்யும்படி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் பொதுப்பணித்துறை இன்ஜினியரும், காண்ட்ராக்டரும் பல்வேறு காரணங்களை கூறி சமாளித்தனர். குறிப்பாக காண்ட்ராக்டரோ வானிலை மீது பழிபோட்டார். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதன் காரணமாகதான், சாலைகளின் நிலை மிக மோசமானதாக மாறி விட்டதாக அவர் கூறினார். இதுபோல் அவர்கள் தரப்பில் மேலும் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இதே காரணங்களைதான் முன்பும் கூறியதாக மக்கள் குற்றம்சாட்டினர். எனவே காண்ட்ராக்டர் மற்றும் இன்ஜினியர் கொடுத்த எவ்விதமான விளக்கத்தையும் இம்முறை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, ஆம்புலன்ஸில் அமர்ந்து மோசமான சாலையில் பயணம் செய்து பார்க்கும்படி காண்ட்ராக்டரையும், இன்ஜினியரையும் அவர்கள் வலியுறுத்தினர்.
''இதுபோன்ற கடினமான சாலைகளில் பயணம் செய்யும் அனுபவம் எப்படி இருக்கிறது? என்று உணர்ந்து பாருங்கள்'' எனவும் அவர்களிடம் மக்கள் கூறினர். பொதுமக்கள் விடாமல் வலியுறுத்தியதன் காரணமாக, காண்ட்ராக்டரும், இன்ஜினியரும் ஆம்புலன்ஸில் ஏறி கொண்டனர். ஆம்புலன்ஸில் இருந்த ஸ்ட்ரெச்சரில், காண்ட்ராக்டர் படுத்து கொள்ள, அவருக்கு அருகே இன்ஜினியர் அமர்ந்து கொண்டார்.
இதன்பின் சேதமடைந்த சாலைகளில் அவர்களை அழைத்து கொண்டு மக்கள் உலா வந்தனர். இந்த பயணம் முடிவடைந்த பின்பாக அவர்களிடம் மக்கள் கருத்து கேட்டனர். இதற்கு இந்த அனுபவம் வலி நிறைந்ததாக இருந்தது என காண்ட்ராக்டர் கூறினார். இதன்பின் சாலைகளை தரமாக அமைக்கும்படியும், மோசமான சாலைகளை விரைவாக சீர்செய்யும்படியும் அவர்களிடம் மக்கள் மீண்டும் கேட்டு கொண்டனர். இது தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
மோசமான சாலைகளில் பயணம் செய்யும் அனுபவம் எப்படி இருக்கும்? என்பதை காண்ட்ராக்டருக்கும், இன்ஜினியருக்கும் உணர்த்த கோவா மக்கள் செய்த அதிரடி செயல் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!