Just In
- 24 min ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுது!! காரணம் என்னவா இருக்கும்?
- 32 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 1 hr ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
புத்தம் புதிய விமானம் மூலம் சென்னை வந்த குடியரசு தலைவர்... இந்த விமானத்தின் பின்னால் இவ்ளோ தகவல்களா?
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பயன்படுத்திய புத்தம் புதிய விமானம் பற்றிய வியக்க வைக்கும் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவிலுக்கு செல்வதற்காக நமது நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று விடியற்காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தை விட்டு வெளியேறாமலேயே ராணுவ விமானத்தின் மூலம் அவர் திருப்பதிக்கு சென்றார். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து வருவதற்காக அவர் ஏர் இந்தியா ஒன் - பி777 விமானத்தைப் பயன்படுத்தினார்.
இந்த விமானம் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வாங்கப்பட்ட சிறப்பு விமானம் ஆகும். விரைவில் இந்த விமானங்கள் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் (விவிஐபி) பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த புதிய தலைமுறை விமானத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாகவே குடியரசு தலைவர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசனைத்தைச் செய்கிறார். முன்னதாக, பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் வைத்து விமானத்தை மலர் தூவி வரவேற்றார்.
முன்னதாக பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களின் பயணங்களுக்காக பி747 ரக விமானங்களேப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதற்கு பதிலாகவே தற்போது புதிய தலைமுறை போயிங் 777 விமானங்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இது உலகின் வல்லாதிக்க தலைவர்கள் பயன்படுத்தி வரும் பாதுகாப்ப நிறைந்த விமானங்களைக் காட்டிலும் அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளைக் கொண்ட விமானம் ஆகும்.
இதனையேப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாகவே குடியரசு தலைவர் தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த விமானம் பி747-400 விமானத்தைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய விமானமாக இருக்கின்றது. தொடர்ந்து, பல்வேறு சொகுசு வசதிகளை மிக தாராளமாக வழங்கக்கூடிய வகையிலும் அது காட்சியளிக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பறக்கும் சொகுசு அரண்மனையைப் போன்று இந்த புதிய விமானம் இருக்கும்.
மேலும், இந்த விமானம் வானத்தில் பறக்கும்போது பிற விமானங்களைப் போல் அதிக ஒலியையும் எழுப்பாது. இத்தகைய சிறப்பு விமானத்தையே மிக சமீபத்தில் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியா பெற்றது. இதனையே தற்போது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்திருக்கின்றார்.
எதிர்காலத்தில் இந்த விமானங்களையே குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அரசு முறை உள் நாடு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்த இருக்கின்றனர். இவர்களுடன் சில குறிப்பிட்ட விவிஐபிக்களின் பயணங்களுக்கும் இந்த விமானம் விரைவில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த விமானங்கள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, தற்போது வாங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமானங்களில் அகச்சிவப்பு மற்றும் மின்னணு போர் எதிர்ப்பு கவசங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஏவுகணை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்ற வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது.
Image Source: PresidentOfIndia/Twitter
இதற்காக எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகள் விமானத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய வசதிக் கொண்ட இரு விமானங்கள் சுமார் 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு இந்த விமானங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!