Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, இந்திய பிரதமர் மோடி வந்த கருப்பு கார் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று (பிப்ரவரி 24) இந்தியா வந்தார். இன்றும், நாளையும் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வருகை, இந்தியாவில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இன்று காலை, குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அவர் கட்டித்தழுவி வரவேற்றார்.
ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி (Range Rover SUV) காரில், மோடி கெத்தாக வந்தார். இது கருப்பு நிற கார் ஆகும். அதே சமயம் இது கவச கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த எஸ்யூவி ரக காரை, பிரதமர் மோடி பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி ரேஞ்ச் ரோவர் காரில் வந்தார்.
அப்போதுதான் முதல் முறையாக அவரை அந்த காருடன் நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் சமீப காலமாக இந்த காருடன் பிரதமர் மோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது. கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் காரில், பிரதமர் மோடி வருவது இன்றைய நாட்களில், வாடிக்கையான ஒரு நிகழ்வாகி விட்டது. பிரதமர் மோடி இதற்கு முன்பாக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-series) காரை பயன்படுத்தி வந்தார்.
அதுதான் அவரது அலுவல் காராகவும் இருந்து வந்தது. இதுவும் கூட கவச கார்தான். உச்ச கட்ட பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில்தான், பிரதமர் மோடி வலம் வந்து கொண்டிருந்தார். பிரதமரின் வாகனம் என்பதால், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரில் ஏராளமான மாடிபிகேஷன்களும் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை பயன்படுத்துவதில்லை. அவர் அந்த காருக்கு மாற்றாகதான், தற்போது ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் திடீரென அவர் காரை மாற்றியது ஏன்? என்பதற்கு தற்போதைய நிலையில் தெளிவான விடை எதுவும் கிடைக்கவில்லை.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காகதான் அவர் காரை மாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வந்தது, 2010 ரேஞ்ச் ரோவர் எச்எஸ்இ (2010 Range Rover HSE) கார் ஆகும். இதில், 5.0 லிட்டர், வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது லக்ஸரி எஸ்யூவி ரக கார் ஆகும். அத்துடன் இந்த காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வரவேற்பதற்காக, அகமதாபாத் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்த கார் கவனம் ஈர்த்துள்ளதால், கார் ஆர்வலர்கள் பலர், அந்த கார் பற்றிய பல்வேறு விஷயங்களை தேடி தெரிந்து கொண்டு வருகின்றனர். பிரதமர் போன்ற முக்கியமான நபர்களுக்கு இதுபோன்ற கார்கள் அவசியமான ஒன்று.
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) நிறுவனத்தால் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். மிகவும் புகழ்பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் நிர்வகித்து வருகிறது. இது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.
சரி, இந்த காரின் மதிப்பு எவ்வளவு? என்ற சந்தேகம் தற்போது அனைவருக்கும் எழலாம். ஆனால் இந்த காரின் மதிப்பை சரியாக கூற முடியாத சூழல் இருக்கிறது. பிரதமரின் பாதுகாப்பிற்காக, இந்த காரில் ஏராளமான மாடிபிகேஷன்கள் செய்யப்பட்டிருக்கலாம். எனவே இந்த காரின் மதிப்பு எவ்வளவு? என்பது உறுதியாக தெரியவில்லை.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!