Just In
- 39 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் பிரதமர் மோடிக்கு புதிய விமானம்... இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக 2 புதிய அதிநவீன விமானங்கள் வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு மற்றும் மிரட்டலான பாதுகாப்பு வசதிகள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் மற்றும் விமானங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் ஏர் இந்தியாவின் பி747 (B747) விமானங்களில்தான் பிரதமர் மோடி பறந்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்லாது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரும் கூட பி747 விமானங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மிக முக்கியமான நபர்கள் பயணிக்கும் இந்த பி747 விமானங்களை ஏர் இந்தியாவின் பைலட்கள்தான் இயக்கி வருகின்றனர்.
ஏஐஇஎஸ்எல் எனப்படும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் (AIESL - Air India Engineering Services Limited) அவற்றை பராமரித்து வருகிறது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரின் பயன்பாட்டிற்காக 2 புதிய விமானங்களை இந்தியா கொள்முதல் செய்யவுள்ளது.
பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் ஆகியோரின் பயணங்களுக்காக இரண்டு பி777 (B777) விமானங்களைதான் இந்தியா வாங்கவுள்ளது. பி777 விமானங்களை போயிங் 777 (Boeing 777) என்றும் அழைக்கலாம். அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தால் இந்த விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.
2020ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த விமானங்களை இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்த உள்ளனர். ஆனால் இந்த விமானங்களை ஏர் இந்தியா பைலட்கள் இயக்க போவதில்லை. அதற்கு பதிலாக ஐஏஎஃப் எனப்படும் இந்திய விமான படையை (IAF- Indian Air Force) சேர்ந்த பைலட்கள்தான் போயிங் 777 விமானங்களை இயக்கவுள்ளனர்.
எனினும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் லிமிடெட் மூலம்தான் இந்த விமானங்கள் பராமரிக்கப்படும். புதிய போயிங் 777 விமானங்களை இயக்குவதற்காக இந்திய விமானப்படையை சேர்ந்த 4-6 பைலட்கள் ஏற்கனவே பயிற்சி பெற்று விட்டனர். வரும் மாதங்களில் இன்னும் கூடுதலான பைலட்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஆலையில் இருந்து 2 புதிய போயிங் 777 விமானங்கள் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும். ஐஏஎஃப் பைலட்களால் மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் இயக்கப்படும்'' என்றார். இந்தியாவின் முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே இந்த 2 புதிய விமானங்களும் பயன்படுத்தப்படும்.
பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோருக்காக வாங்கப்படவுள்ள 2 புதிய விமானங்களில், Large Aircraft Infrared Countermeasures (LAIRCM) எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் (Missile Defence Systems) இடம்பெற்றிருக்கும்.
இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்தும் போயிங் 747-200பி (Boeing 747-200B) விமானத்திற்கு இணையான பாதுகாப்பை இந்திய பிரதமர் மோடியின் போயிங் 777 விமானமும் பெறும். மேலும் இந்தியா வாங்கவுள்ள இரண்டு புதிய போயிங் 777 விமானங்களில் எஸ்பிஎஸ் எனப்படும் சுய பாதுகாப்பு அறைகளும் (SPS - Self-Protection Suites) இடம்பெற்றிருக்கும்.
இந்த 2 பாதுகாப்பு அமைப்புகளையும் இந்தியாவிற்கு விற்பனை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதன் மொத்த மதிப்பு 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி போன்ற தலைவர்களுக்கு இவ்வாறான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விமானங்கள் அத்தியாவசியமான ஒன்றுதான்.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!
-
ரூ525 டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யனுமா? இது தான் கரெக்டான டைம்!