Just In
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செலவு கம்மி! அரசு பஸ்களுக்கு புதிய எரிபொருள்! எப்படி தயார் பண்றாங்கன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!
வரும் அக்டோபர் 20ம் தேதியில் இருந்து, புதிய வகையான எரிபொருள் மூலம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில், காற்று மாசுபாடு பிரச்னை அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிஎன்ஜி (CNG- Compressed Natural Gas) போன்ற, மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் அதிகரிக்கப்படுகிறது.
குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளை, சிஎன்ஜி மூலம் இயக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், மஹாராஷ்டிர மாநிலம் புனே முதன்மையான இடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தற்போது புனே ஒரு படி மேலே போய், வெகு விரைவில் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) மூலம் பேருந்துகளை இயக்கவுள்ளது.
ஆம், வரும் அக்டோபர் 20ம் தேதி முதல், புனேவில் 20 பேருந்துகள் பயோ-சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உணவகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு கழிவுகளில் இருந்து இந்த எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புனேவில் பேருந்துகளை இயக்கி வரும் பிஎம்பிஎம்எல் (PMPML - Pune Mahanagar Parivahan Mahamandal Limited) நிறுவனத்தின் 20 பேருந்துகள்தான் பயோ-சிஎன்ஜி மூலம் இயக்கப்படவுள்ளன. இது புனேவை சேர்ந்த போக்குவரத்து கழகம் ஆகும். சிஎன்ஜி என்பதும், பயோ-சிஎன்ஜி என்பதும் வெவ்வேறானவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை சிபிஜி (Compressed Bio-Gas) என்றும் அழைக்கின்றனர்.
பயோ-சிஎன்ஜி மூலமாக பேருந்துகளை இயக்குவதற்கான சோதனைகள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும், இந்த எரிபொருளை இந்தியன் ஆயில் நிறுவனம் சப்ளை செய்ய இருப்பதாகவும், பிஎம்பிஎம்எல் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''புனேவின் தலேகான் பகுதியில், பயோ-சிஎன்ஜி எரிபொருளை நிரப்பும் நிலையம் உள்ளது.
எனவே பிஎம்பிஎம்எல் நிறுவனத்தின் போசரி டெப்போவில் இருந்து தலேகான் நோக்கி செல்லும் பேருந்துகள் இந்த எரிபொருளில் இயக்கப்படும். அதே சமயம் நிகிடி பகுதியில் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் இன்னும் 3 மாதங்களுக்கு உள்ளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
பயோ-சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்குவதற்கான சோதனைகள் 2 முறை நடத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்திற்குள், மொத்தம் 100 பேருந்துகள் இந்த மாற்று எரிபொருளில் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த பேருந்துகள் வழக்கமான சிஎன்ஜி-க்கு பதிலாக பயோ சிஎன்ஜி மூலம் இயங்கும்.
சிஎன்ஜி மற்றும் பயோ-சிஎன்ஜி ஆகிய 2 எரிபொருட்களின் செலவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்'' என்றனர். நாடு முழுக்க தற்போது சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய வாகனங்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிஎன்ஜி மூலமாக இயங்க கூடிய கார்கள் பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய வாகனங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை போன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை. அத்துடன் பெட்ரோல், டீசல் மூலம் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவை விட, சிஎன்ஜி மூலம் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவும் கூட மிகவும் குறைவுதான்.
Note: Images used are for representational purpose only.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350