Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல், முழு ஊரடங்கை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. எனவே அன்றைய தினத்தில் இருந்து இந்தியா முழுவதுமாக முடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறை முக்கியமானது.
மார்ச் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் வாகன விற்பனை அடியோடு முடங்கி போனது. இது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆர்டிஓ அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், புதிய வாகனங்கள் விற்பனையின் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலுமாக தடைபட்டு போனது. ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால், கடந்த மே 4ம் தேதியில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது.
இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாத் ஆகிய போக்குவரத்து அலுவலகங்களில், கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புனே ஆர்டிஓ அலுவலக தரவுகளின்படி, கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை, 904 இரு சக்கர வாகனங்களும், 690 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 58 ஆட்டோ ரிக்ஸாக்கள், 27 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இதர வகையில் 5 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,684 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்தில், சுமார் 1,000 இரு சக்கர வாகனங்களும், 700 நான்கு சக்கர வாகனங்களும் என 1,700 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புனே, பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில், 22 நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.
உண்மையில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கார், டூவீலர் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில், புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்தான். இதனால் தேவை உயரும் பட்சத்தில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக புதிய வாகனம் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!