Just In
- 24 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 48 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல், முழு ஊரடங்கை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. எனவே அன்றைய தினத்தில் இருந்து இந்தியா முழுவதுமாக முடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறை முக்கியமானது.
மார்ச் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் வாகன விற்பனை அடியோடு முடங்கி போனது. இது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆர்டிஓ அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், புதிய வாகனங்கள் விற்பனையின் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலுமாக தடைபட்டு போனது. ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால், கடந்த மே 4ம் தேதியில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது.
இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாத் ஆகிய போக்குவரத்து அலுவலகங்களில், கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புனே ஆர்டிஓ அலுவலக தரவுகளின்படி, கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை, 904 இரு சக்கர வாகனங்களும், 690 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 58 ஆட்டோ ரிக்ஸாக்கள், 27 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இதர வகையில் 5 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,684 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்தில், சுமார் 1,000 இரு சக்கர வாகனங்களும், 700 நான்கு சக்கர வாகனங்களும் என 1,700 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புனே, பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில், 22 நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.
உண்மையில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கார், டூவீலர் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில், புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்தான். இதனால் தேவை உயரும் பட்சத்தில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக புதிய வாகனம் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!