Just In
- 55 min ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 1 hr ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 2 hrs ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 4 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வாகனங்கள் விற்பனை பட்டாசு கௌப்ப போகுது... காசு கொட்ட போகுது... ஜாலி மூடில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல், முழு ஊரடங்கை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. எனவே அன்றைய தினத்தில் இருந்து இந்தியா முழுவதுமாக முடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட துறைகளில் ஆட்டோமொபைல் துறை முக்கியமானது.
மார்ச் 24ம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் டீலர்ஷிப்களும் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் வாகன விற்பனை அடியோடு முடங்கி போனது. இது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆர்டிஓ அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால், புதிய வாகனங்கள் விற்பனையின் மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலுமாக தடைபட்டு போனது. ஆனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதால், கடந்த மே 4ம் தேதியில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது.
இதன் காரணமாக ஆர்டிஓ அலுவலகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாத் ஆகிய போக்குவரத்து அலுவலகங்களில், கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புனே ஆர்டிஓ அலுவலக தரவுகளின்படி, கடந்த மே 18ம் தேதியில் இருந்து ஜூன் 8ம் தேதி வரை, 904 இரு சக்கர வாகனங்களும், 690 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 58 ஆட்டோ ரிக்ஸாக்கள், 27 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இதர வகையில் 5 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,684 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகத்தில், சுமார் 1,000 இரு சக்கர வாகனங்களும், 700 நான்கு சக்கர வாகனங்களும் என 1,700 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புனே, பிம்ப்ரி சின்ச்வாத் ஆர்டிஓ அலுவலகங்களில், 22 நாட்களில் ஒட்டுமொத்தமாக சுமார் 3,400 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்படும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை, வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.
உண்மையில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கார், டூவீலர் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில், புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம்தான். இதனால் தேவை உயரும் பட்சத்தில், வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக புதிய வாகனம் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதனை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்