Just In
- 20 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 1 hr ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 2 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Movies அடேங்கப்பா ஒரு புடவை இத்தனை லட்சமா?.. கீர்த்தி சுரேஷ் அட்ராசிட்டியை பார்த்தீங்களா
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
உயிர்காக்கும் பணியில் களமிறங்கும் ஆட்டோக்கள்... ஆம்புலன்ஸ் இல்லனா என்னங்க நாங்க இருக்கோம்...
ஆம்புலன்ஸ் பற்றாக்குறை தலைவிரித்தாடும் நிலையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் ஆட்டோரிக்சாக்களையே ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை மிகக் கடுமையாக உயர்ந்து வருகின்றது. இதைவிட உயிரிழப்போரின் எண்ணிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உயரத் தொடங்கியிருக்கின்றது.
தீவிர தொற்றின் காரணமாக நோயாளிகள் இறப்பதைவிட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்போரின் எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.
போதாக்குறைக்கு தற்போது ஆம்புலன்ஸ் பஞ்சமும் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கின்றது. இரண்டாம் அலை பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த நிலை தென்பட்டாலும், தற்போது மக்கள் கொத்து கொத்தாக பாதிப்புக்குள்ளாகி வருவதால் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு பெரும் கவலைக்குரியதாக மாறியிருக்கின்றது.
நாடு முழுவதிலும் இந்த நிலையே காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் உதவிக் கரம் நீட்டும் வகையில் சில தனி நபர்கள் தங்களின் கார்களையே ஆக்சிஜன் வசதிக் கொண்ட வாகனங்களாக மாற்றி வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்கும் பயன்படும் வகையில் குறைந்த கட்டண சேவையை அவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் மஹராஷ்டிரா மாநிலம், புனேவில் ஆட்டோக்காரர்கள் சிலர் தங்களின் ஆட்டோரிக்ஷாக்களை ஆக்சிஜன் இருக்கும் வாகனங்களாக மாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்வகையில் கணிசமான ஆட்டோக்காரர்கள் இந்த நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றனர்.
இந்தியாவில் அதிகம் பாதிப்பைச் சந்தித்து வரும் நகரங்களில் புனேவும் ஒன்று. இங்கு மருத்துவ அடிப்படை கட்டமைப்பு மிகக் கடுமையாக சரிந்து காணப்படுகின்றது. படுக்கை, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் போன்ற அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது.
இந்த நிலையிலேயே புனவேச் சார்ந்த ஆட்டோக்காரர்கள் தங்களின் ஆட்டோரிக்ஷாக்களை தற்காலிக ஆக்சிஜன் வசதிக் கொண்ட ஆம்புலன்ஸ்களாக மாற்றத் தொடங்கியிருக்கின்றனர். "தங்களிடம் இருக்கும் ஆக்சிஜன்கள் வாயிலாக ஓர் நோயாளுக்கு குறைந்ததது 6 முதல் 7 மணி நேரம் வரை ஆக்சிஜனை வழங்க முடியும்" என ஆம்புலன்ஸாக மாறியிருக்கும் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேபோன்று நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில அரசு பேருந்துகளையே ஆக்சிஜன் மையங்களாக மாற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றன. இதேபோன்று தற்போது புதிதாக சென்னை மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ககன்தீப் 250க்கும் மேற்பட்ட கார்களை ஆக்சிஜன் வாகனங்களாக மாற்றி பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..