Just In
- 19 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Movies கணவருடன் செம ரொமான்ஸ்.. சங்கர் மகள் ஐஸ்வர்யா தருணின் போட்டோஷூட்!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஜப்பானுடன் கை கோர்க்கும் பஞ்சாப் மாநில அரசு... எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
மாநிலத்தில் மின் வாகனங்களை களமிறக்குவதற்காக ஜப்பான் நாட்டின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பஞ்சாப் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தீர்வு காணும் விதமாக மின் வாகனங்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் ஊக்குவித்து வருகின்றன.
இதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் அரசுகள், கூடுதலாக மின்வாகன உற்பத்தி மீதான முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும் களமிறங்கியுள்ளது.
அந்தவகையில் பஞ்சாப் அரசு, மாநிலம் முழுவதும் மின்சார வாகனங்களை களமிறக்குவதற்காக ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெட்ரோ என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், ஜப்பான் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஓர் அமைப்பாகும்.
மேலும், இது ஜப்பானிய நிறுவனங்களுக்கு பிற நாடுகளிடம் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகின்றது.
இதுமட்டுமின்றி, விரைவில் இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் தலைமையில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் மிட்சுய், எஸ்.எம்.எல். இசுசு, மிட்சுபிஷி மற்றும் யன்மார் ஆகிய நிறுவனங்கள் கலந்துக் கொண்டு முதலீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை, அம்மாநில கூடுதல் முதலீட்டு ஊக்குவிப்பு அதிகாரி வினி மஹாஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் மையத்தை அமைப்பதற்கான முயற்சிகளிலும் பஞ்சாப் அரசு ஈடுபட்டு வருகின்றது.
இதுதவிர, மாநிலத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக, மின்வாகன முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியிலும் அது ஈடுபட்டு வருகின்றது.
முன்னதாக இதேபோன்று முதலீட்டை ஈர்க்கும்விதமாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசு முக்கிய அதிகாரிகள் கொண்ட குழு வெளிநாடு சென்றதன் பயனாக 20,351 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதில், சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் பிஒய்டி, ஏத்தர் எனர்ஜி, ஐடிசி பேப்பர் போர்டு, மிட்சுபா சிக்கால், ஸ்ரீவாரி எனர்ஜி சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளன.
புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை