போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி - தக்க பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

காவல்துறை சிறப்பு ஐஜி செயலினால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

போக்குவரத்து விதிமீறல்களும், அதைச்சார்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களும் நாட்டிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களால் அரங்கேறும் விபத்தும், உயிரிழப்புகளும் அந்த துறையைச் சார்ந்தவர்களுக்கு கடும் தலைவலியாக மாறியுள்ளது. மேலும், இது நாட்டிற்கே மிகப்பெரிய கரும் புள்ளியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

முன்னதாக, அதிகம் விபத்து நடைபெறும் மற்றும் விபத்தால் இறப்போர் நாடுகளின் பட்டியலில் 9வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மிக வேகமாக 5வது இடத்தைப் பிடிக்கின்ற அளவிற்கு வளர்ச்சியடைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இலக்கை மிக விரைவாக 2030ம் ஆண்டிற்குள் இந்தியா எட்டிவிடும் என புள்ளி விவர தகவலுடன் ஆய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

இந்தியாவின் இந்த அவல நிலைக்கு போக்குவரத்து விதிமீறல்களே மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. ஆகையால், இதனை முதலில் ஒழித்துக் கட்ட எண்ணிய மத்திய அரசு, முன்பெப்போதும் இல்லாத அளவிலான மாற்றத்தை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தில் செய்துள்ளது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

குறிப்பாக, இந்த மோட்டார் வாகன சட்டத்தில் பத்து மடங்கு உயர்த்தப்பட்ட விதிமீறல்களுக்கான அபராதம் அனைவரையும் கதிகலங்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது.

இந்த கடுமையான அபராதத்தால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பலர் சொந்த வாகனங்களுக்கு பதிலாக பொதுத்துறை வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு மாறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

மத்திய அரசின் இந்த சட்டம் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இருப்பினும், அதீத அளவில் உயர்த்தப்பட்டுள்ள அபராதங்கள், போலீஸாரை ஊழல் செய்ய வழி வகுக்கும் மற்றும் சாமானிய மக்களை அதிகளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் என்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில மாநில அரசுகள் மட்டும் அதனை சற்றே குறைத்து நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

முன்னதாக இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தபோது, இது ஜனநாயக படுகொலை எனக்கூறி எதிர்கட்சியினர் கடும் அமலியில் ஈடுபட்டனர். இருப்பினும், தங்களிடம் இருந்த பெரும்பான்மையை வைத்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று புதிய சட்டத்தை நாடு முழுவதும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

இந்த புதிய சட்டத்தினால் அதிகளவில் சாமானியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம், சில நேரங்களில் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளும் சில நேரங்களில் சிக்குகின்றனர்.

இந்நிலையில், காவல் துறை தலைவரின் (ஐஜி) அதிகாரப்பூர்வ கார் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி அபராதத்திற்கான செல்லாண் வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் இந்த செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதகாவும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவித்தனர்.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

இருப்பினும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்கின்ற வகையில் போக்குவரத்துத்துறைப் போலீஸார் மேற்கொண்டிருக்கும் அபராத நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

தற்போது, அரங்கேறிய இந்த சம்பவம் சண்டிகர் மாநிலத்தின் ஹல்லோமஜ்ரா என்ற பகுதியில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம், அதேவழியாக சென்ற பொதுமக்களில் ஒருவர் காரின் விதிமீறல்குறித்து சமூக வலைத் தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தினாலயே வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

அவர் வெளியிட்ட புகைப்படத்தின்படி, சண்டிகர் காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான டொயோட்டா ஃபார்ச்சுனர், ஜீப்ரா கிராஸிங் எனப்படும் பாதசாரிகள் கடப்பதற்கான பாதையில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வருகின்றது.

இந்த புகைப்படம் சமூக அதிவேகமாக மிக வேகமாக வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீஸார் அந்த காருக்கு அபராத செல்லாணை வழங்கினர்.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

மேலும், அந்த கார்குறித்து விசாரித்ததில், அது சிறப்பு பாதுகாப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (IIG) பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கார் என்பது தெரியவந்தது. இவருக்கு அபராதம் வழங்கும் விதமாக ரூ. 500-க்கான செல்லாண் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அபராதத்தை அவர் இரு மடங்காக செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போலீஸ் ஐஜி செயலால் அதிர்ச்சி.. புகைப்படத்தை வெளியிட்டு பாடம் புகட்டிய இளைஞர்.. என்னனு தெரிஞ்சா கடுப்பாயிடுவீங்க..!

ஏனென்றால் புதிய விதியில், விதிமீறும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சாமானியர்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக அபராதம் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். இருப்பினும், ஐஜி வழங்கப்பட்ட அபராதம் பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ரூ. 500-க்கான அபராதம் நிச்சயம் என கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

போலீஸ் ஐஜி-யை மட்டுமில்லைங்க போக்குவரத்துத்துறை அமைச்சரைகூட போலீஸார் இதுபோன்று செல்லாண் வழங்கி தெரிக்க விட்டிருக்கின்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்தியாவில் அண்மைக் காலங்களாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையே மிக முக்கியமானதாக இருக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

மேலும், விதிமீறல்களால் உருவாகும், விபத்து உள்ளிட்ட பின் விளைவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இது, போக்குவரத்துத்துறைக்கு மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் தீர்வு காண்பதில் அவர்களுக்கு பெரும் சிக்கல் நிலவி வருகின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஆகையால், தங்களின் பணியை சுலபமாக்கிக் கொள்ளும் விதமாக, தற்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். அதில், மிக முக்கியமானதாக சிசிடிவி கேமிராக்களின் பயன்பாடு மாறியிருக்கின்றது. நாட்டில் அரங்கேறும் பல்வேறு குற்றச் சம்சங்களில் தீர்வு காண்பதற்கும் இது முக்கிய பங்களிக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

ஆகையால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைக் கண்கானிக்கும் விதமாக நாட்டின் பல முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கான தண்டனையை வழங்க உதவுகின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சரான சிபி சிங், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, சிசிடிவி கேமிரா புகைப்படத்தை வைத்து போலீஸார் அபராதச் செல்லாண் வழங்கியுள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சரை அதிர வைத்த டிராஃபிக் போலீஸார்... அதிர்ச்சியில் தொண்டர்கள்!

பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய போக்குவரத்துத்துறை அமைச்சரே, இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அம்மாநிலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலை நியூஸ் 11 என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் போக்குவரத்து விதமீறலுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் இவ்வாறு செய்திருப்பது, அக்கட்சியில் அவருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

இச்சம்பவம், அம்மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அமைச்சரின் டொயோட்டா பார்ச்சூனர் கார், சிவப்பு மின் விளக்கு சிக்னலை மீறிச் சென்றுள்ளது. இதையறிந்த, அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட அமைச்சரின் காருக்கு அபராதச் செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

ஆகையால், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிபி சிங் ரூ. 100 அபராதத்திற்கான இ-செல்லாணைப் பெற்றுள்ளார். இந்த தொகையை அவரது உதவியாளரிடம் கட்டிவிடுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், அதிகாரிகளும் விதிகளை கடைபிடிக்க வேண்டும்" என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

இதேபோன்று, முன்பு ஒரு முறை அபராதம் செலுத்தியிருப்பதாக அவர் நினைவு கூர்ந்தார். மேலும், சமீபத்தில் போக்குவரத்துத்துறை காவல் அதிகாரி ஒருவர், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை விரட்டிச் செல்வதைக் கண்ட அவர், காவலர்களுக்கு பயனளிக்கும் விதமாக தானியங்கி நம்பர் பிளேட் ரீடரை அறிமுகம் செய்திருந்தார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

காவலர் செய்த செயல், விபத்துகளை உருவாக்கும் என்பதால், அதனைத் தவிர்க்கும் விதமாக இத்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். ஆனால், அவர் அறிமுகம் செய்திருந்த திட்டமே அவருக்கு சோதனையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சட்டத்தின் பிடியில் அனைவரும் ஒன்று தான். அதில், அமைச்சராக இருந்தால் என்ன... குடிமகனாக இருந்தால் என்ன... யாராக இருந்தாலும், குற்றத்திற்கு உரிய தண்டனையை அடைந்தே ஆக வேண்டும்.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அம்மாநில போக்குவரத்துத்துறை போலீஸார், அதே துறையின் அமைச்சருக்கு அபராதத்திற்கான செல்லாணை அனுப்பி வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அநேகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

அமைச்சர் பயன்படுத்தும் டொயோட்டா பார்ச்சூனர் கார், அரசின் அதிகாரப்பூர்வமான வாகனம் ஆகும். இது அவரது கடமைகளைச் செய்ய உதவியாக இருக்கும் வகையில் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சிபி சிங்கின் கார் விதியை மீறிச் சென்றது குறித்த புகைப்படம் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தை நீங்கள் மேலே காணலாம்...

குறிப்பு இந்த செய்தி செப்டம்பர் 2ம் தேதியே வெளியிடப்பட்டது. கூடுதல் தகவலுக்காக இதை தற்போது பகிர்ந்தோம்...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Punjab Police IG Toyota Fortuner Fined For Traffic Violation! Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X