Just In
- 52 min ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 1 hr ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 3 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 10 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஃபேல் போர் விமானம் Vs சீனாவின் ஜே-20 போர் விமானம்: எது சிறந்தது?
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வர இருக்கின்றன. முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை (ஜூலை 29) அம்பாலா விமானப் படை தளத்திற்கு வந்து சேர இருக்கின்றன. இந்த விமானங்கள் சீனாவுக்கு எதிராக லடாக் பிரதேச பாதுகாப்பில் இணைக்கப்பட உள்ளன.
தேசத்தின் பாதுகாப்பு
இந்த நிலையில், அதிநவீன போர் விமானமாக கருதப்படும் சீனாவின் செங்க்டு ஜே-20 போர் விமானத்துடன் ரஃபேல் போர் விமானங்களின் திறனை ஒப்பிட்டு பார்க்கும்போது நமது தேச பாதுகாப்பு நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Alert5/Wiki Commons
வல்லுனர்கள் கருத்து
சீனா பயன்படுத்தும் விமானங்களில் மிக அதிநவீன போர் விமானமாக கருதப்படும் ஜே-20 போர் விமானத்தின் திறன் குறித்து, அதனுடன் ரஃபேல் போர் விமானத்தில் இருக்கும் கூடுதல் சிறப்பம்சங்களையும் இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
Image Courtesy: Alert5/Wiki Commons
தலைமுறை அம்சங்கள்
போர் விமானங்கள் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்கள், வேகம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட தலைமுறையை சேர்ந்ததாக வரையறுக்கப்படுகின்றன. இதில், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கும் விமானங்கள் ஸ்டீல்த் ரக போர் விமானங்களாக கூறப்படுகிறது.
வரையறை
அதாவது, எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில விஷயங்களை வைத்து இந்த விமானத்தை எதிரி நாட்டு விமானங்கள் கண்டறியும் வாய்ப்பு உண்டு. ஆனால், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை எதிரி நாட்டு ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாது.
ரஃபேல் எந்த தலைமுறை மாடல்?
அந்த வகையில், ரஃபேல் போர் விமானம் 4.5 தலைமுறை மாடலாகவும், சீனாவின் ஜே-20 போர் விமானம் ஐந்தாம் தலைமுறை மாடலாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், வழக்கம்போல் எதிரி நாடுகளை அச்சத்தில் வைக்க ஜே-20 போர் விமானத்தை ஐந்தாம் தலைமுறை விமான மாடலாக சீனா கூறுவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு தகவல் உலவுகிறது.
உண்மை என்ன?
தனது செங்க்டு ஜே-20 போர் விமானத்தை ஐந்தாம் தலைமுறைக்கு இணையான ஸ்டீல்த் ரக போர் விமானமாகவும் சீனா தெரிவித்தாலும், அது சந்தேகத்திற்கு இடமானது என்று இந்திய பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அது ஸ்டீல்த் ரக போர் விமானம் என்பதே ஒரு மிகைப்படுத்தப்பட்ட விஷயம் என்றும் தெரிவிக்கின்றனர்.
Image Courtesy: Baiweiflight/Wiki Commons
எஞ்சின்
ரஃபேல் மற்றும் ஜே20 ஆகிய இரண்டு போர் விமானங்களுமே இரட்டை எஞ்சின் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், ஜே-20 விமானம் ஐந்தாம் தலைமுறையாக தெரிவிக்கப்பட்டாலும், அதில் பயன்படுத்தப்படும் எஞ்சின்கள் 3.5 தலைமுறைக்கு இணையான சிறப்பம்சங்களை மட்டுமே கொண்டதாக கூறப்படுகிறது.
Image Courtesy: Bzuk/Wiki Commons
ஜே-20யில் ரஷ்ய எஞ்சின்
ரஷ்யாவின் எஸ்யூ35 விமானத்தின் எஞ்சின்தான் சீனாவின் ஜே-20 விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. அந்த எஞ்சினைவிட ரஃபேல் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் இரட்டை எஞ்சின் பல விதத்திலும் செம்மை வாய்ந்ததாகவும் ரஃபேல் போர் விமானங்களை பரிசோதித்த ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரி ஏர் மார்ஷல் நம்பியார் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: emperornie/Wiki Commons
பன்முனை செயல்திறன்
ஒரே நேரத்தில் கண்காணிப்பு, தாக்குதல், தற்காப்பு, எதிரி விமானங்களை இடைமறித்தல் என நான்கு விதமான பணிகளை ரஃபேல் போர் விமானங்களால் செய்ய முடியும். இதனால், ஆம்னி ரோல் போர் விமானம் என்று ரஃபேல் குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஜே-20 விமானத்தால் இதுபோன்று பன்முனை செயல்பாடுகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாது என்றும் அவர் கூறுகிறார்.
ஏவுகணைகள்
ஜே-20 விமானத்தில் இருக்கும் ஏவுகணையை வைத்து 200 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். ரஃபேலில் தரை இலக்கை தாக்கும் ஏவுகணை 150 கிமீ தூரம் வரையிலும், வான் இலக்குகளை தாக்குதவதற்கான ஏவுகணை 200 கிமீ தூரம் வரையிலும் பாய்ந்து செல்லும் திறன் கொண்டவை.
ரஃபேல் இதுல பெஸ்ட்
அதேநேரத்தில், எரிபொருள், ஆயுதங்களை சுமந்து கொண்டு எளிதாக பறக்கும் திறனில் ரஃபேலுடன் ஜே-20 விமானத்தை ஒப்பிட இயலாது. அது அந்தளவுக்கு திறன் கொண்டதாக இருக்காது. ரஃபேல் போர் விமானம் தனது எடையைவிட 1.5 மடங்கு அதிக எடையை சுமந்து கொண்டு பறக்கும். அதுவும் க்ரூஸ் செய்து செல்வதிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.
அதிகபட்ச வேகம்
ரஃபேல் போர் விாமனம் மேக் 1.8 என்ற வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது. சீனாவின் ஜே-20 போர் விமானம் மேக் 2.0 வேகத்தில் பறக்கும். அதேபோன்று, விமானத்தின் மேல் எழும்பும் திறனும் முக்கியமானது. அதேநேரத்தில், ரஃபேர் போர் விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது 3,700 கிமீ தூரம் வரை பறக்கும்.
வெற்றிக்கு இதுதான் முக்கியம்
ரஃபேல் மற்றும் ஜே-20 ஆகிய விமானங்களில் இருக்கும் ரேடார்கள் கிட்டத்தட்ட இணையான திறன் பெற்றவையாக தெரிவிக்கப்படுகிறது. விமானியின் சாதுர்யம், எதிரிகளை வீழ்த்துவதற்கு அல்லது தாக்குவதற்கு விமானப் படையின் திட்டமிடல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.
Image Source:emperornie/Wiki Commons
News Source: ANI
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?