Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 5 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
செப்.10-ல் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைகிறது ரஃபேல் போர் விமானங்கள்!
வரும் 10ந் தேதி இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய உள்ளது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக சீனா எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி வருவதால், கடும் பதட்டமான சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த பதட்டமான தருணத்தில், பிரான்ஸ் நாட்டிடம் ஆர்டர் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்களின் முதல் தொகுதி கடந்த ஜூலை இறுதியில் இந்தியா வந்து சேர்ந்தன.
ரஃபேல் போர் விமானங்களின் வருகை அண்டை நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க பெரிதும் உதவும் என்பதால், இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சிகர தருணமாக பார்க்கப்பட்டது.
மேலும், ரஃபேல் போர் விமானங்கள் சீனா குடைச்சல் கொடுத்து வரும் லடாக் எல்லைப் பிரதேசத்தில்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
இந்த சூழலில், ரஃபேல் போர் விமானஙகள் கடந்த 15ந் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.
இந்த நிலையில், வரும் 10ந் தேதி ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஃபேல் போர் விமானங்களின் முதல் படைப் பிரிவு அம்பாலாவில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் அமைக்கப்பட உள்ளது.
வரும் 10ந் தேதி அங்கு நடைபெறும் விழாவில் முதல் தொகுதியில் வந்தடைந்துள்ள 5 ரஃபேல் போர் விமானங்களும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு சேவையில் அர்ப்பணிக்கப்படும்.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரஃபேல் போர் விமானங்கள் வருகையின் மூலமாக இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4.5 தலைமுறை போர் விமான ரகத்தை சேர்ந்த ரஃபேல் போர் விமானம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எளிதாக சமாளிப்பதற்கான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!