Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
ராஜஸ்தான் மாநிலத்தில் காலி பால்பாக்கெட் மற்றும் வாட்டர் பாட்டில்களை வழங்கினால் தள்ளுபடி விலையில் பெட்ரோல், டீசல்களை ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் விற்பனை செய்து வருகிறார். மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்திய பால்பாக்கெட்களை குப்பையில் வீசாமல் இவர்களிடம் கொடுத்தால் குறைந்த விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். இது குறித்த முழுமையான மற்றும் விரிவான தகவல்களைக் கீழே காணலாம் வாருங்கள்.
இன்று உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை சுற்றுச் சூழலை மனிதர்கள் பாழாக்குவதுதான். ஒரு இடத்தில் விலங்குகள் பயன்படுத்தி வந்தால் அந்த இடத்தில் விலங்குகளின் கால்தடமும், அதிகபட்சம் இதன் உணவுகளின் எச்சங்களே இருக்கும்.
ஆனால் மனிதர்கள் ஒரு இடத்தை பயன்படுத்தினால் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் தான் அதிகமாக இருக்கும். மனிதர்கள் படுத்திய பிளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் எனப் பல விஷயங்கள் குப்பைகளாகக் கிடக்கும்.
மனிதர்களுக்கு இன்னும் பிளாஸ்டிக்கை இப்படி வெளியில் வீசுவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக் காத்திருக்கும் பாதிப்புகள் குறித்த எந்த யோசனையும் இல்லை. தங்கள் இஷ்டத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகளை வீசி வருகின்றனர். பிளாஸ்டிக் போன்ற ஒரு உன்னதமான படைப்பு நம்மை அழிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதைச் சரியான முறையில் நாம் கையாள வேண்டும்.
இதை உணர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார். அதன்படி அவர் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வருபவர்கள் தாங்கள் வீட்டில் பயன்படுத்திய 1 லிட்டர் பால் பாக்கெட்டின் பிளாக்டிக் கவர் அல்லது 2 அரை லிட்டர் பாக்கெட்டின் கவரை வழங்கினால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ1 குறைத்துக்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வழங்கினால் அதற்கும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ1 தள்ளுபடியும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடியும் வழங்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்காக அவர் உள்ளூரில் உள்ள பால் விநியோக நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த பெட்ரோல் பங்க்கில் சேரும் பால் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டகளை அந்நிறுவனம் முறையாகச் சேகரித்து அதை மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள சாகங்லால் பக்தவர்மால் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் அசோக் குமார் முந்த்ரா தன் பெட்ரோல் பங்கின் தான் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதற்காக சாராஸ் டைரி மற்றும் வாட்டர் பாட்டில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளார். அதன்படி இவர் வாடிக்கையாளர்களிடம் பிளாஸ்டிக் பால்கவர் மற்றும் வாட்டர் பாட்டில்களை சேகரித்து அருகில் உள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் போட்டு வைக்கிறார். அதை அவ்வப்போது சாராஸ் டைரி நிறுவனத்தினர் வந்து எடுத்துச் செல்கின்றனர்.
இதுவரை 700 காலி பால் பாக்கெட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முந்த்ரா மாதம் 10 ஆயிரம் காலி பால் பாக்கெட்களை சேகரிக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளார். இந்த திட்டத்தை 6 மாதங்கள் தொடர்ந்து செய்யத் திட்டமிட்டுள்ளார்.
மேலும் சாராஸ்டைரி நிறுவனம் காலி பால் பாக்கெட்களுக்கு நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கூப்பன்களை வழங்கவும் அதை வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம் என்ற திட்டத்தைச் செயல்முறைப்படுத்த யோசித்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!