Just In
- 57 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஸ்கூட்டருக்கு இந்த கதி ஆகும்னு நினைச்சே பார்க்கல!! பொங்கி எழுந்த ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர்
சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவதெல்லாம் இந்தியாவில் சாதராணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயமாகும். அவ்வாறு குஜராத், ராஜ்கோட்டில் இரு வாகன ஓட்டிகளுக்கு இடையே நடந்த மோதலை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
அமைதியான ராஜ்கோட் சாலை ஒன்றில் இரு பக்கங்களில் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் மற்றும் ஒரு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், ஒரு கட்டத்தில் மோதுவது போல் நிற்கின்றன.
அதற்கு பிறகு நடந்த விஷயங்களை மேல் உள்ள சிசிடிவி வீடியோவில் காணலாம். ஆக்டிவாவில் இரு இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் தான் முதலில் இந்த பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள்.
ஹோண்டா சிட்டி காரின் கண்ணாடிகளை பிடித்து இழுத்த அவர்கள் தொடர்ந்து கார் ஓட்டுனரையும் வம்புக்கு இழுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து கார் ஓட்டுனர் தப்பித்து செல்கிறார்.
ஆனால் அவர் மீண்டும் திரும்ப வந்த சாலையில் இருந்த ஸ்கூட்டரை நொறுக்கி தள்ளுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் மோதியதில் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றாலும், ஸ்கூட்டர் பறந்தது.
மேலும் அவர் மோதிய வேகத்தில் நிறுத்த முடியாமல் அருகில் இருந்த மற்றொரு காரின் மீதும் மோதிவிடுகிறார். ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர்களில் ஒருவர் மயிரிழையில் தான் தப்பித்துள்ளார் என்பதும் வீடியோ பார்க்கும்போது தெரிய வருகிறது.
பறந்த வேகத்திற்கு ஸ்கூட்டரை இனி பயன்படுத்தவே முடியாது என்று தான் நினைக்கிறோம். ஹோண்டா சிட்டியை காட்டிலும் மோதலில் சிக்கிய மூன்றாவது வாகனத்தின் பின்புறத்திற்கு தான் அதிகளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்.
இத்தனைக்கும் ஹோண்டா சிட்டி கார் ரிவர்ஸில் தான் வந்து மோதியுள்ளது. ரிவர்ஸில் வந்ததால் சிட்டி காரின் ஓட்டுனரால் அடுத்த சில நொடிகளிலேயே அந்த இடத்தில் இருந்து கிளம்ப முடிந்துள்ளது.
மோதலுக்கு உள்ளான மூன்றாவது கார் ஹூண்டாய் ஐ20 ஆகும். இந்த சிசிடிவி வீடியோவை வைத்து ஆராய்ந்ததில் ஹோண்டா சிட்டி காரின் உரிமையாளரின் பெயரின் பெயர் ஜெயராஜ் டவ்டா ஆகும்.
இது பார்த்தால் முழுக்க முழுக்க சாலையில் நடைபெறும் வழக்கமான சண்டை போல் தான் தெரியும். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட மோதலாக கூட இருக்கலாம். ஏனென்றால் ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர் கடைசி வரை காரில் இருந்து வெளியே வரவில்லை.
கருப்பு நிற கண்ணாடியால் அவரது முகம் மறைந்துள்ளது. இவ்வாறு காரில் இருந்து வெளியே வந்து ஸ்கூட்டரில் வந்தவரை கண்டிக்காதவர் இப்படி பெரிய மோதலை உண்டு செய்திருப்பது சற்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மூன்றாவது வாகனத்தை சேதம் அடைய வைப்பதற்காக கூட இந்த மோதல் திட்டமிடப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு தான் நிச்சயம் அந்த ஹூண்டாய் ஐ20 கார் உரிமையாளரும் சந்தேகிப்பார். இவ்வாறு சந்தேகத்திற்குள்ளாமல் இருக்க வேண்டும் என்றால், பயணங்களின் போது அதிகம் கோபமடையக்கூடாது. மனதை ஒரே நிலைப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
ஸ்கூட்டரில் வந்தவர்கள் தப்பித்து இருப்பார்கள். ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனரை ஹூண்டாய் ஐ20 உரிமையாளர் தேடி சென்றிருப்பார். எனவே இவ்வாறான நிகழ்வுகளை சந்திக்க நேர்த்தால் இந்த வீடியோவினை ஒருமுறை நினைத்து பாருங்கள்.