Just In
- 24 min ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 1 hr ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 2 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 2 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அடுத்த 3 மாதங்களுக்கு வாகன கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டியதில்லை... வந்தது புதிய அறிவிப்பு
வாகன கடன்களுக்கான இஎம்ஐகளை அடுத்த மூன்று மாதங்களாக செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவிலான சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாகன தயாரிப்புகளுடன் பெரும்பான்மையான சிறு, குறு வணிகங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இந்திய அரசாங்கம் கடன் தொகைகளை திரும்பி செலுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இஎம்ஐகளை ஜுன் வரையில், அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை. அரசாங்கத்தின் இந்த அவசர கால நடவடிக்கை நிச்சயம் கடன் மூலமாக வாகனங்களை வாங்கியவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும்.
வாகன கடன்களுக்கான இஎம்ஐ மட்டுமில்லாமல், வேளான் உள்பட அனைத்து விதமான மொத்த மற்றும் சில்லறை கடன்களுக்கான இஎம்ஐகளையும் மூன்று மாதத்திற்கு செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாத இஎம்ஐ தடையினால் லோன்களுக்கான வட்டி தொகைகளை கூடுதலாக மூன்று மாதங்கள் செலுத்த வேண்டி வரும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை வங்கிகளும் சமாளிக்கும் விதமாக ரெப்போ ரேட்கள் குறைக்கப்படவுள்ளன. இதனால் வங்கிகள் மற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி வீதம் குறையும்.
இந்த இம்எம்ஐ-களுக்கான கால அவகாசத்துடன், எஃப்ஏடிஏ மற்றும் சியாம் அமைப்புகள் உச்ச நீதிமனறத்தில் தாக்கல் செய்த மனுவினால் பிஎஸ்4 வாகனங்களை சந்தையில் விற்பதற்கான காலக்கெடுவும் ஏப்ரல் 24ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த கால நீட்டிப்புடன் டீலர்ஷிப்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முழுமையாக தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
பிஎஸ்4 வாகனங்களுக்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் அதிகரித்திருப்பது சந்தையில் உள்ள சில நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், இந்த அறிவிப்பு சில நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போல் உள்ளது. ஏனெனில் இந்த கூடுதல் கால அவகாசத்தால் மீண்டும் பிஎஸ்4 வாகனங்களை இந்தியா முழுவதும் உள்ள டீலர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் அவசரகால அறிவிப்புகளை எதிர்நோக்கி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு நிச்சயம் இந்த சூழ்நிலையை சற்று சமாளிக்க உதவும்.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!