Just In
- just now பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 1 hr ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிரடி காட்டும் போலீஸ்... வண்டில இனிமேல் இது இல்லனா அவ்ளோதான்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும்!
காவல் துறையினர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அனைத்து வாகனங்களின் பின் பகுதியிலும் பிரதிபலிப்பு டேப் (Reflective Tape) கட்டாயமாக இருக்க வேண்டும் என காவல் துறையினர் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இரு சக்கர வாகனங்கள் முதல் பெரிய வர்த்தக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் சரியாக தெரியாமல் சாலை விபத்துக்கள் நடைபெறுவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது. இதுபோன்ற விபத்துக்களை தடுக்கும் நோக்கில், அனைத்து வாகனங்களுக்கும் பிரதிபலிப்பு டேப் கட்டாயம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் சமீப காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதை தொடர்ந்து தற்போது இந்த உத்தரவை காவல் துறையினர் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். எனவே அனைத்து வாகனங்களிலும் பிரதிபலிப்பு டேப்களை ஒட்டி கொள்ளும்படி பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை மீறி பிரதிபலிப்பு டேப் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் பிரதிபலிப்பான்கள் உடன்தான் வருகின்றன. பின் பகுதியில் டெயில்லேம்ப்களுக்கு கீழாக அவை வழங்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் நான்கு சக்கர வாகனங்களில் பின் பக்க பம்பரின் மீது பிரதிபலிப்பான்களை காணலாம். பொதுவாக மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரு சக்கர வாகனங்களில் ஒரே ஒரு பிரதிபலிப்பான் மட்டுமே இருக்கும்.
ஆனால் நான்கு சக்கர வாகனங்களில் வழக்கமாக இரண்டு இருக்கும். ரேடியம் போன்ற ஒளிரும் தன்மையுள்ள பொருட்கள் மூலம் இந்த சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் உருவாக்கப்படுகின்றன. உலகிலேயே சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெற்று வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
பனி மூட்டம் மற்றும் குறைவான வெளிச்சம் காரணமாக வாகனங்கள் பார்வைக்கு சரியாக புலப்படாமல் போவதும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக குளிர்காலங்களில் வட இந்திய பகுதிகளில் அதிகப்படியான சாலை விபத்துக்களுக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பிரதிபலிப்பான்கள் மூலம் 'விஸிபிலிட்டி' அதிகரிக்கும். இரவு நேரங்கள் மற்றும் வெளிச்சம் குறைவான சமயங்களில் பிரதிபலிப்பான்கள் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாகவே அனைத்து வாகனங்களிலும் பிரதிபலிப்பான்கள் இருப்பது கட்டாயம் என காவல் துறையினர் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
வாகனங்கள் மட்டுமல்லாது, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், டிவைடர்கள் மற்றும் தூண்கள் ஆகியவற்றிலும் பிரதிபலிப்பான் டேப்களை ஒட்டும் பணிகளை நொய்டா காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என காவல் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நொய்டா காவல் துறைதான் இந்த அதிரடி உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''பிரதிபலிப்பு பட்டைகள் மூலம் 'விஸிபிலிட்டி' அதிகரிக்கும். இதன் மூலம் சாலையை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். டிராக்டர்கள், லாரிகள் மற்றும் இதர வாகனங்களிலும் பிரதிபலிப்பு பட்டைகளை ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றனர்.
காவல் துறையின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்கள் வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களது பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
அத்துடன் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவது, காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது, அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது போன்ற போக்குவரத்து விதிமுறைகளையும் அனைவரும் பின்பற்றினால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
Note: Images used are for representational purpose only.
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு