Just In
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 4 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 6 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 7 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டெல்லி வாகன மாசுபாடு: உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு...!!
இந்திய தலைநகர் டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தினை டெல்லி உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இனி காணலாம்.
தலைநகர் டெல்லியில் இப்போதைய பிரச்சினை காற்று மாசுபாடு பற்றியதுதான். காற்று மாசுபாட்டுக்கு வாகன புகை பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. தலைநகரில் இரு சக்கர வாகனங்களுக்கு இணையாக நான்கு சக்கர வாகனங்களின் பெருக்கம் உள்ளது. மேலும் அருகில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து தினசரி வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகம்.
டெல்லியில், வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் வெகுவாக உயர்ந்து வருவதால். வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று மாசுபாடு வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்குகள் ஏற்படும் என்று ஆய்வுகள் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன.
டெல்லியில் அபாய அளவை தாண்டி காற்று மாசுபாடு நிலவி வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டால், புழுதி படர்ந்த படலம் கண்ணை மறைப்பதால் பகல் நேரத்திலும் வாகனங்கள் விளக்குகள் எரிய விட்டவாறு செல்கின்றன.
இந்நிலையில் டெல்லியில் ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்தினை டெல்லி உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போது சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் சோதனை கட்டத்தில் உள்ள ரிமோட் சென்சார்களை ஆய்வு செய்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் மற்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் இயக்குனருமான சுனிதா நாராயண் கூறியபோது, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய மொபைல் வேன்கள் இதுவரை பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அதற்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டதால், மேலும் அடுத்த குளிர்காலம் வரும்முன் வாகன சோதனையை தீவிர படுத்தவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ரிமோட் சென்சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகன மாசுபாட்டினை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என சுனிதா நாராயண் கூறினார்.
இதன் முதற் கட்டமாக டெல்லியில் நுழையும் வெளிமாநில வாகனங்களை சோதனையிட விரைவில் டெல்லி மாநகர எல்லைகளில் ரிமோட் சென்சார் பொருத்தப்படும் என மாசு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் அதிக தரும் வாகனங்கள் என நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 500 வாகனங்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்படுகிறது.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?