Just In
- 35 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 48 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 1 hr ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 2 hrs ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- News நாயுடுவுடன் கைகோர்த்த காபு..தனித்து நிற்கும் ரெட்டி! ஆந்திராவை ஆள போவது யார்? சாதிதான் அங்கு எல்லாமே
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உடனே கழட்டீருங்க... இனிமேல் உங்க வண்டில இது இருந்தா காலி... சென்னை ஐகோர்ட் உத்தரவால் களத்தில் இறங்கும் போலீஸ்!
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதை, பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்துவதற்கு ஒன்றிய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. எனினும் இந்த தடையை பொருட்படுத்தாமல் பலர் தொடர்ந்து தங்களது வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பரை பயன்படுத்தி வந்தனர்.
எனவே தமிழ் நாடு காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தனர். அந்த சமயத்தில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
அதேபோன்றதொரு நடவடிக்கையை மீண்டும் எடுப்பதற்கு தமிழ் நாடு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுதான் இதற்கு காரணம். எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் பாதசாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதன் காரணமாகதான் ஒன்றிய அரசு எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு தடை விதித்தது.
மேலும் வாகனங்களின் முன் பகுதியில்தான் விபத்துக்களின்போது ஏர்பேக் வேலை செய்வதற்கான சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார்கள்தான், மோதலை உடனடியாக கண்டறிந்து, ஏர்பேக்குகளை விரிவடைய செய்யும். ஆனால் இந்த இடத்தில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்படுவதால், மோதலின் தாக்கத்தை சென்சார்கள் உணராமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே ஏர்பேக் இருந்தாலும், விபத்துக்களின்போது வேலை செய்யாது. வாகனங்களின் உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளின் உயிருக்கும் இது ஆபத்தானது. எக்ஸ்ட்ரா பம்பர் தடை செய்யப்பட்டிருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, தடையை பொருட்படுத்தாமல் பலர் தொடர்ந்து எக்ஸ்ட்ரா பம்பர்களை பயன்படுத்தி வந்தனர்.
இதை எதிர்த்து சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கடுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தடை செய்யப்பட்ட எக்ஸ்ட்ரா பம்பர்கள் பொருத்தப்படுவதற்கு கடுமையான அதிருப்தியை தெரிவித்தது.
பொதுமக்கள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போன்றவர்களின் வாகனங்களிலும் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்படுகிறது என நீதிமன்றம் கவலையும் தெரிவித்தது. இதையடுத்து எக்ஸ்ட்ரா பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இல்லாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை செய்தனர். இதன் பின்னர் எக்ஸ்ட்ரா பம்பர்களை தாங்களாகவே முன் வந்து பலர் அகற்றி விட்டனர். எனினும் எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 21ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது எக்ஸ்ட்ரா பம்பர்களால், வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.
அத்துடன் பம்பர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பருக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும், அதனை நீக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் எக்ஸ்ட்ரா பம்பர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனவே தமிழ் நாட்டில் வரும் நாட்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. உங்கள் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்றி விடுவதுதான் உங்கள் பர்சுக்கும், பாதுகாப்பிற்கும் நல்லது.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?