Just In
- 2 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 20 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாஜக-வை வீழ்த்திய உத்தவ்.. பதறிபோய் இந்தியா ஓடி வந்த உலக பணக்காரர் ரிச்சர்ட்... எதற்காக தெரியுமா..?
மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆட்சி இருக்கையில் புதிதாக அமர்ந்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்திப்பதற்காக உலக பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் அவசர அவசரமாக இந்தியா வந்திறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக செல்வந்தர்களில் ஒருவரும், சுறு சுறுப்பான தொழில்முனைவோர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகிப்பவருமான ரிச்சர்ட் பிரான்சன் மஹாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் உத்தவ் தாக்கரேவை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக தகவல் வெளிாகியுள்ளது.
முன்னதாக, அப்போதைய மஹாராஷ்டிரா அரசு மாநிலத்தில் ஹைப்பர் லூப் எனப்படும் அதிவேக போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை விர்ஜின் குழுமத்துடன் செய்திருந்தது.
தற்போது, மஹராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆளுகை செய்து கொண்டிருக்கின்றது. ஆகையால், பாஜகவினர் ஆட்சி செய்துகொண்டிருந்த செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு தற்போது எந்தவொரு இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் விர்ஜின் குழுமத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
vமேலும், மரியாதை நிமித்தமாகவும், ஹைப்பர் ஒப்பந்தம்குறித்து ஏதேனும் குழப்பம் இருந்தால் அதனை தெளிவுப்படுத்தவும் இந்த சந்திப்பினை பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக ரிச்சர்ட் பிரான்சன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் ஓர் மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது, நிர்வாக மாற்றம் ஏற்பட்டால் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது அவசியம். புதிய ஆட்சியாளர்கள் அத்திட்டத்தைப் பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள விரும்புவார்கள். இதேபோன்று, புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அவர்கள் விரும்புவார்கள். ஆகையால், இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமையும்" என தெரிவித்தார்.
இத்துடன், மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மட்டுமின்றி நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா போன்றோரையும் புதிய தொழில் தடத்தை உருவாக்கும் நோக்கில் சந்திக்க இருப்பதாக அவர் கூறினார்.
இந்த ஹைப்பர்லூப் வழித்தடம் மத்திய புனேவில் இருந்து மெகபொலிஸ் மற்றும் நவி மும்பை விமான நிலையம் வரை இணைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மும்பை மற்றும் புனேவுக்கு இடையேயான பயணதூரம் மூன்று மணி நேரத்தில் இருந்து 25 நிமிடமாக குறையும் என கூறப்படுகின்றது. நவி மும்பை விமான நிலையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நாட்டியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.
உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான சிவ சேனா கட்சி கடந்த நவம்பர் 28ம் தேதி ஆட்சியமைத்தது. அப்போது, சில தேவையற்ற திட்டங்களை உடனடியாக நிறுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் புல்லட் ரயில் மற்றும் ஹைபர்லூப் போன்ற திட்டங்களும் அடங்கும் என கூறப்படுகின்றது.
எனவே, ரிச்சர்ட் பிரான்சன் இதுகுறித்து தன்சார்பாக விளக்கமளித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயலில் இறங்கவுள்ளார்.
ரூ. 3,54,750 கோடி செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2.5 ஆண்டுகளில் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், பல லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது. இந்த திட்டம் ஆறு மாதங்களுக்குள் தொடங்கப்படும் என கூறப்பட்டநிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இத்திட்டத்திற்கு புதிய அரசு பச்சைக் கொடி காட்டுமா அல்லது ஏதேனும் காரணம்கூறி தடை விதிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதேபோன்று, இந்தியாவில் மஹாராஷ்டிரத்துக்கு முன்பாகவே ஆந்திர மாநில அரசு அமராவதியில் ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவையை தொடங்க ஒப்பந்தம் செய்திருந்தது. மேலும், டொரன்டோ - மான்ட்ரீல் இடையே 640 கி.மீ. தூரத்திற்கும், அபு தாபி-துபாய் இடையிலும் ஹைப்பர்லூப் போக்குவரத்து சேவைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!