Just In
- 38 min ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 58 min ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 1 hr ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 2 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா?
இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய வகை சாலை ஒன்று விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி வருவதை போல், பிளாஸ்டிக் கழிவுகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. எனவே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
இந்தியாவில் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்ய தடை போன்ற உத்தரவுகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. ஆனால் அதனை முழுமையாக அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதன் ஒரு பகுதியாக நெதர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகில் எதிர்கால சாலைகள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. இந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து அமைக்கப்பட்ட சாலை, வெகு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நொய்டா நகர நிர்வாகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மொத்தம் 500 மீட்டர் தூரத்திற்கு, இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. சோதனை முயற்சியாக அதிகாரிகள் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கிறோம். இந்த சோதனை முயற்சியில், மொத்தம் 35 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவின் மூலம் அமைக்கப்படும் சாலையின் தரம் மற்றும் செயல்பாடு கண்காணிக்கப்படும்.
இதில், திருப்திகரமான முடிவுகள் கிடைத்தால், இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்திய அளவில் பார்த்தால், இத்தகைய திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை'' என்றனர். இந்தியா ஒவ்வொரு நாளும் சுமார் 26 ஆயிரம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது. இதன் மூலம் உலகிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை அதிகம் உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
எனவே நொய்டாவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில், ஏற்கனவே அதிகாரிகள் கூறியபடி, இந்தியாவின் பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது இந்தியா முழுக்க அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.