Just In
- 7 min ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 1 hr ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 1 hr ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
Don't Miss!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இதைதான் செய்ய போகிறோம்... சபதம் போட்ட மோடியின் அமைச்சர்...
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் என்ன செய்ய போகிறோம்? என்பதை மோடியின் அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கார் அல்லது டூவீலர் என குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வாகனமாவது இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்போது உருவாகி விட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக 2.56 கோடி வாகனங்கள் இயங்கி கொண்டிருந்தன. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 84 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைப்பட்ட இந்த சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரித்திருக்க கூடும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமேதான் உள்ளது.
குறிப்பாக லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அதற்கு ஏற்ற வகையில், இந்தியா முழுக்க தரமான தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது என்பது அவசியமாகிறது.
நாட்டின் பொருளாதார ரீதியிலான வளர்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த முறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தவர் நிதின் கட்கரி. இம்முறையும் அவருக்கு அதே துறைதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை நிதின் கட்கரி தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 60 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை நிறைவேற்றுவதில் நிதின் கட்கரி தீவிரம் காட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நடப்பு நிதியாண்டில் 12,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 10,800 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அப்போது ஒரு நாளைக்கு சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் படி பணிகள் வேகப்படுத்தப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று (ஜூன் 4ம் தேதி) நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவல்களை தெரிவித்தார்.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுவாக்குவதில் பாஜக அரசு கூடுதல் கவனம் செலுத்தும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் ஆய்வு கூட்டத்தை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று மாலை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!