Just In
- 2 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 4 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 5 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 5 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டில் நின்ற காருக்கு 3 டோல்கேட்டில் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூல்... எவ்ளோனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க...
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு பாஸ்டேக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் ஜோஷி. 48 வயதாகும் இவரது செல்போனுக்கு கடந்த புதன் கிழமையன்று மூன்று எஸ்எம்எஸ்-கள் வந்துள்ளன. இதில், அவரது பாஸ்டேக் கணக்கில் இருந்து ஒட்டுமொத்தமாக 310 ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதனால் என்ன பிரச்னை என கேட்கிறீர்களா? பிரச்னை இருக்கிறது.
ஆம், சம்பவத்தன்று அதாவது பாஸ்டேக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ்-கள் வந்த சமயத்தில் வினோத் ஜோஷியின் கார் அவரது வீட்டில்தான் நிறுத்தப்பட்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் அன்றைய தினம் முழுவதும் வினோத் ஜோஷியின் கார் அவரது வீட்டிலேயேதான் நின்று கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் ஜோஷி, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வினோத் ஜோஷி கூறுகையில், ''கடந்த புதன் கிழமை எனது மகளை பள்ளியில் விடுவதற்காக சேனாபதி பபாட் சாலைக்கு மட்டுமே நான் எனது காரை எடுத்து சென்றேன்.
பஷான் பகுதியில் உள்ள எனது வீட்டில் நாள் முழுவதும் கார் நின்று கொண்டிருந்ததற்கான சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது'' என்றார். மேலும் வாஷி சுங்க சாவடியில் 40 ரூபாய் கட்டணம் எடுக்கப்பட்டதாக முதல் எஸ்எம்எஸ்-ஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது எனவும் வினோத் ஜோஷி கூறியுள்ளார். இது எப்படி நடந்தது? என்பதை நான் கண்டறிவதற்கு முன்னதாக காலை 8.40 மணிக்கு இரண்டாவது எஸ்எம்எஸ் வந்தது.
இதில், காலாப்பூர் சுங்க சாவடியில் 203 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் மதியம் 12.40 மணியளவில் மூன்றாவது எஸ்எம்எஸ் வந்தது. இதில், தாலேகான் சுங்க சாவடியில் 67 ரூபாய் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது'' என்றார். ஒட்டுமொத்தமாக அவரது கணக்கில் இருந்து 310 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து, பாஸ்டேக் வழங்கிய வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேச முயன்ற வினோத் ஜோஷியின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. எனவே இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என வினோத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம், சுங்க சாவடியை கடந்ததாக கூறி, கடந்த காலங்களில் பாஸ்டேக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15-16ம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில், சுங்க சாவடிகளில் அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பாஸ்டேக்கில் இதுபோன்ற குளறுபடிகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!