Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சபாஷ்.. சென்னை சுகாதார பணியாளர்கள் பணிக்கு சென்று வர இலவசமாக கார்கள்.. மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரெவ்!
கொரோனாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கினை வகித்து ஹீரோக்களாக மாறியிருக்கும் சுகாதார பணியாளர்களை மகிழ்விக்கும் விதமாக ரெவ் நிறுவனம் இலவச கார்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கண்ணுக்கே புலப்படாத ஓர் வரஸ் மனித இனத்திற்கே பெரும் சவாலை விடுத்து வருகின்றது. தங்களை சர்வாதிகார நாடுகள் என அலட்டிக் கொண்டவர்கள்கூட தற்போது பெட்டி பாம்பாக முடங்கியிருக்கின்றனர். ஏனென்றால், அவர்களுக்கு முன்பு எதிரியாக வந்திருப்பவன் அவ்வளவு எளிதில் மனித கண்களுக்கு அகப்படாத ஓர் நுண்ணிய வகை வைரஸ் ஆகும். இதைக் கண்டுதான் உலக நாடுகள் பல தற்போது நடு நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம், இந்த கண்களுக்கு புலப்படாத வைரசுக்கு எதிரான போராட்டத்தையும் அவை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கொரோனா எனப்படும் ஒற்றை வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டிருக்கின்றன என்றுகூட கூறலாம். அந்தளவிற்கு பல நாடுகள் கூட்டு சேர்ந்து கோரோனாவை ஒழித்துக்கட்டும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன.
இந்த போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் அதன் சுதாரத்துறையே மேம்படுத்துவது மிக முக்கிய தேவையாக உள்ளது. ஆகையால், முன்பு பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கிய நாடுகள்கூட இனி வரும் காலங்களில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிக நிதியை ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றன. அதேசமயம், பெருமளவிலான தொகையை தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கும் ஒதுக்கி வருக்கின்றன.
ஏனென்றால் கொரோனா வைரஸ் அதன் தீர தன்மை மூலம் புதிய பாடத்தை மனிதர்களுக்கு கற்றுக் புகட்டியுள்ளது. எனவே, தற்போது சுகாதாரம் மற்றும் மருத்தும் சார்ந்து பணி செய்யும் அனைவரும் நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். தொடர்ந்து, அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உதவிகளை வாரி வழங்கி ஆரம்பித்திருக்கின்றன.
அந்தவகையில், பிரபல ரெவ் (Self-driving mobility startup Revv) எனப்படும் வாடகை வாகன நிறுவனம் மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்து பணி புரிபவர்களுக்கு இலவச கார் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஓர் கார்களை சுயமாக இயக்க வாடகைக்கு வழங்கும் தனியார் அமைப்பு ஆகும்.
தற்போது கொரோனா தீவிரத்தின் காரணமாக நாடு முழுவதும் மிக நெருக்கடியான சூழல் நிலவி வருகின்றது.
குறிப்பாக, வெளியே சென்று வருவதற்கான வசதி முழுவதுமாக தடை செய்யப்படுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சென்று வர சுகாதாரப் பணியாளர்கள் அதிகளவில் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.
ஆகையால், இவர்களுக்கு உதவும் விதமாக ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ரெவ் நிறுவனம் இலவசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வசதியை நாட்டின் முக்கியமான ஐந்து நகரங்களுக்கு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், சென்னையும் அடங்கும். இத்துடன், தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் ரெவ் அதன் இலவச சேவையை மருத்துவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. தற்போது, ஆயிரம் கார்களே மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், தேவைப்பட்டால் கூடுதல் கார்களையும் வழங்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெவ் நிறுவனத்தின் இந்த சேவையைப் பெற விரும்பும் சுகாதார மற்றும் மருத்துவர்கள் குறிப்பிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது. முன்னதாக 9250035555 என்ற சிறப்பு எண்ணில் தொடர்பு கொண்டு காருக்கான முன் பதிவை செய்ய வேண்டும். இதன் பின்னரே குறிப்பிட்ட பொதுப் பணியாளருக்கு ரெவ் நிறுவனம் காரை இலவசமாக வழங்கும்.
தொடர்ந்து, சிறப்பு எண்ணைப் போலவே அதன் அதிகாரப்பூர்வ தளத்திலும் இதற்கான தனி பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆகையால், அந்த பக்கத்தில் விசிட் செய்தும் இந்த இலவச காருக்கான பதிவை சுகாதாரப் பணியாளர்களால் செய்ய முடியும்.
இதுகுறித்து ரெவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் சுகாதாரப் பணியாளர்களே முன்னணியில் இருக்கின்றனர். அவர்கள்தான் இப்போதைய ஹீரோ. பொதுப்போக்குவரத்து போக்குவரத்து கிடைக்காததால் மருத்துவமனை செல்வதில் அவர்கள் அதிகம் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையை போக்கவே நாங்கள் இந்த உதவியை வழங்க இருக்கின்றோம்" என தெரிவித்துள்ளது.
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350