Just In
- 41 min ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 1 hr ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 1 hr ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- 3 hrs ago கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
Don't Miss!
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies Baakiyalakshmi serial: செழியனை அடித்து துவைக்கும் ஜெனி அப்பா.. பொங்கியெழுந்த எழில்!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...
பைக், கார், பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகுந்த உரிமம் பெற்று 18 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்கள் 30, 40 வருடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தாலும் தானாக வாகனங்களுடனான தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.
இதற்கு பார்வையில் தெளிவின்மை, காது சரியாக கேளாமை, கை,கால் நடுக்கம், உடல்நல குறைபாடுகள் என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து சரி இன்று நீண்ட நாட்கள் கழித்து பைக்கையோ அல்லது காரையோ ஓட்டுவோம் என முடிவு எடுப்பவர்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் ரைடிங்கை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை தான் உள்ளது.
ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் கேரளாவில் வயதானவர் ஒருவர் சுற்றுலா பேருந்து ஒன்றை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பார்பதற்கு 65-70 வயதில் இருப்பவர் போல் தெரியும் அவர் இந்த வயதிலும் மிக நேர்த்தியாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதில் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், வீடியோ எடுப்பது அவருக்கு தெரியாது. இருப்பினும் இடையில் வரும் செல்போன் அழைப்பு ஒன்றிற்காக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுவது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது தான். இதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி அரசாங்கம் பல முறை கூறிவிட்டது. இருந்த போதும் இந்த செயல்பாடு குறைந்த பாடில்லை.
வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனையின்படி கண், காது போன்றவற்றை பரிசோதித்தல், மருந்து, மாத்திரைகளை தவறாது உட்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவ்வாறு வயதான பின்பும் கனரக வாகனங்களை இயக்க முடியும்.
இவ்வாறான மருத்து, மாத்திரை மட்டுமல்லாமல் தற்போதுள்ள வயதானவர்கள் அவர்களது இளம் பருவத்தில் மிகவும் சத்தாண உணவுகளை உட்கொண்டு வந்ததும் தான் இவரது இந்த அசாத்தியமான செயலுக்கு காரணம்.
இவருக்கு நீண்ட வருட பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒன்று இவர் பேருந்து அல்லது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையேல், தற்போதும் அந்த பணியில் பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். இவரை பொறுத்த வரையில் வயது வெறும் எண் மட்டுமே.