Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...
பைக், கார், பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகுந்த உரிமம் பெற்று 18 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்கள் 30, 40 வருடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தாலும் தானாக வாகனங்களுடனான தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.
இதற்கு பார்வையில் தெளிவின்மை, காது சரியாக கேளாமை, கை,கால் நடுக்கம், உடல்நல குறைபாடுகள் என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து சரி இன்று நீண்ட நாட்கள் கழித்து பைக்கையோ அல்லது காரையோ ஓட்டுவோம் என முடிவு எடுப்பவர்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் ரைடிங்கை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை தான் உள்ளது.
ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் கேரளாவில் வயதானவர் ஒருவர் சுற்றுலா பேருந்து ஒன்றை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பார்பதற்கு 65-70 வயதில் இருப்பவர் போல் தெரியும் அவர் இந்த வயதிலும் மிக நேர்த்தியாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதில் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், வீடியோ எடுப்பது அவருக்கு தெரியாது. இருப்பினும் இடையில் வரும் செல்போன் அழைப்பு ஒன்றிற்காக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுவது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது தான். இதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி அரசாங்கம் பல முறை கூறிவிட்டது. இருந்த போதும் இந்த செயல்பாடு குறைந்த பாடில்லை.
வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனையின்படி கண், காது போன்றவற்றை பரிசோதித்தல், மருந்து, மாத்திரைகளை தவறாது உட்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவ்வாறு வயதான பின்பும் கனரக வாகனங்களை இயக்க முடியும்.
இவ்வாறான மருத்து, மாத்திரை மட்டுமல்லாமல் தற்போதுள்ள வயதானவர்கள் அவர்களது இளம் பருவத்தில் மிகவும் சத்தாண உணவுகளை உட்கொண்டு வந்ததும் தான் இவரது இந்த அசாத்தியமான செயலுக்கு காரணம்.
இவருக்கு நீண்ட வருட பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒன்று இவர் பேருந்து அல்லது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையேல், தற்போதும் அந்த பணியில் பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். இவரை பொறுத்த வரையில் வயது வெறும் எண் மட்டுமே.