Just In
- 47 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 1 hr ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Movies கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்!
பேய் வேஷம் போட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்திய போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பேய் வேஷம் போட்ட இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டாக நினைத்து செய்த காரியம் இப்போது போலீஸ் நிலையம் வரை இழுத்துச் சென்றுவிட்டது.
எந்த ஒரு குறும்புத்தனத்துக்கும் எல்லை உண்டு. அது அடுத்தவர்களை பாதிக்காத வரையில் எளிதாக கடந்து செல்ல வாய்ப்புண்டு. ஆனால், சிலர் செய்யும் குறும்புத்தனங்கள் எல்லை மீறும்போது இந்த இளைஞர்களை போன்று கம்பி எண்ணக்கூட நேரிடும்.
வெளிநாடுகளில் பிசாசு போல வேடமணித்து பிறரை பயமுறுத்தும் வகையில் குறும்புத்தனம் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய வைரலாகிறது. பலர் இதனை ரசித்து கடந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் இதே பாணியில் குறும்புத்தனம் செய்ய முயன்று சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் யஷ்வந்த்பூர், ஷரீப் நகர் பகுதயில் இளைஞர்கள் சிலர், சாலையில் செல்வோரை அச்சமூட்டும் வகையில் குறும்புத்தனம் செய்துள்ளனர்.
பிசாசு போன்று வேடமணிந்து கொண்டு சாலையில் நடந்து செல்வோரையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்தும் வகையில் குறும்புத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை அவரது நண்பர்கள் மறைந்திருந்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
காரில் தூங்கிக் கொண்டிருந்த வாடகை கார் டிரைவர், பைக்கில் வந்தவர், ஆட்டோ ஓட்டுனர், பாதசாரிகளை இந்த இளைஞர்களில் ஒருவர் பிசாசு வேடத்தில் பயமுறுத்தியது வீடியோக்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் குறும்புத்தனத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர்.
இதில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த குறும்புத்தனத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, குறும்புத்தனம் செய்து வீடியோ எடுத்த சாஜீல் முகம்மது, நிவேத், ஷான் நல்லிக், முகம்மது அக்யூப், ஷாஹீப், சையத் நபீல், யூசுப் முகம்மது ஆகிய 7 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். யூ-ட்யூபில் பதிவு ஏற்றுவதற்காக இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
அவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்கள் உரிய விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக இதுபோன்ற குறும்புத்தன வீடியோக்கள் பல இடங்களில் செய்யப்படுகிறது. இதில், சிலர் புரிந்து கொண்டு கடந்து செல்வது உண்டு. சிலர் அச்சமடைந்து ஓடுவதும் நடக்கிறது. இதுதொடர்பாக, போலீஸ் நிலையம் வரை இதுபோன்ற புகார்கள் சென்றதில்லை. முதல்முறையாக இந்த குறும்புத்தன வீடியோ எடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற குறும்புத்தனம் சில வேளையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பையும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை அடிப்படையாக வைத்தே போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!