Just In
- 13 min ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 34 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 1 hr ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நேரில் பார்த்த ஜாலியில் பங்க் ஊழியர் செய்த எக்குதப்பான காரியம்! பென்ஸ் காரை இழந்து அப்செட் ஆன நடிகர்
பிரபல நடிகரை நேரில் பார்த்த சந்தோஷத்தில், எரிபொருள் நிலைய ஊழியர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட நடிகர்கள் என்றாலே அனைவருக்கும் ஒரு வித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. திரையில் பார்த்த நடிகர்களை நேரில் பார்த்து விட்டால், அவர்களது ரசிகர்களை கையில் பிடிக்கவே முடியாது. தங்களுக்கு பிடித்த நடிகருடன் செல்பி எடுக்கவும், அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கவும் ரசிகர்கள் முயற்சி செய்கின்றனர்.
ஆனால் கர்நாடகாவில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவர், பிரபல நடிகர் ஒருவரை பார்த்த உற்சாகத்தில் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ராகவேந்திரா. கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரின் சாகர் சாலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு தனது பென்ஸ் காரில் விஜய் ராகவேந்திரா சமீபத்தில் சென்றார்.
விஜய் ராகவேந்திரா பயணம் செய்த பென்ஸ் கார், பெட்ரோலில் இயங்க கூடியது ஆகும். ஆனால் எரிபொருள் நிலைய ஊழியர் தவறுதலாக டீசலை நிரப்பி விட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மாலை (திங்கள் கிழமை) நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஜய் ராகவேந்திரா அதிர்ச்சியடைந்து விட்டார்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஜோக் நீர் வீழ்ச்சியில் இருந்து நடிகர் விஜய் ராகவேந்திரா திரும்பி கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஷிவமோகா பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் காரை நிறுத்தியபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
காரில் நடிகர் விஜய் ராகவேந்திராவை பார்த்த உடனே எரிபொருள் நிலைய ஊழியர் அளவு கடந்த உற்சாகம் அடைந்ததாகவும், அதன் காரணமாகவே தவறுதலாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக, 37 லிட்டர் டீசலை அவர் காரில் நிரப்பியுள்ளார். ஆனால் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டதை எரிபொருள் நிலையத்திலேயே நடிகர் விஜய் ராகவேந்திரா பார்த்து விட்டார்.
எனவே காரை விட்டு கீழே இறங்கி வந்த நடிகர் விஜய் ராகவேந்திரா, இது பெட்ரோல் கார் எனவும், டீசல் கார் கிடையாது எனவும், எரிபொருள் நிலைய ஊழியரிடம் கூறியுள்ளார். இதன்பின் எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்னையை தீர்ப்பதற்காக நடிகர் விஜய் ராகவேந்திராவிடம் பேசியுள்ளார்.
அத்துடன் தவறான எரிபொருள் நிரப்பப்பட்ட காரை டோ (Tow) செய்து பெங்களூரில் உள்ள ஷோரூமிற்கு உடனடியாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். அதே சமயம் நடிகர் விஜய் ராகவேந்திரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு காரில் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் நடிகர் விஜய் ராகவேந்திரா வருத்தம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இடையே நடிகர் விஜய் ராகவேந்திராவின் காரை பெங்களூரில் உள்ள ஷோரூமில் கடந்த செவ்வாய் கிழமை காலை (ஆகஸ்ட் 11ம் தேதி) விட்டதாக டோ சர்வீஸ் ஊழியர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷிவமோகாவில் இருந்து திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு புறப்பட்டோம்.
மறுநாளான செவ்வாய் கிழமை காலை 6 மணியளவில் பெங்களூர் சென்று விட்டோம்'' என்றார். நடிகர் விஜய் ராகவேந்திராவின் ஓட்டுனரும், டோ சர்வீஸ் ஊழியருடன் ஷிவமோகாவில் இருந்து பெங்களூர் சென்றுள்ளார். பெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் நிரப்பும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் உள்ளன.
இப்படி தவறான எரிபொருளை நிரப்புவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தவறான எரிபொருள் நிரப்பப்பட்டதை உடனடியாக கண்டுபிடித்து விட்டால், ஓரளவிற்கு பிரச்னைகளை குறைத்து கொள்ள முடியும். உடனடியாக சர்வீஸ் மையத்தை அழைத்து, காரை சரி செய்து விடலாம். ஆனால் தவறான எரிபொருள் நிரப்பப்பட்டது தெரியாமல், காரை ஓட்டி விட்டால் அதிக செலவு ஆகலாம்.
எனவே காருக்கு எரிபொருள் நிரப்பும்போது உரிமையாளர்களும் மற்றும் ஓட்டுனர்களும் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பணம் தேவையில்லாமல் செலவு ஆவதுடன், மன உளைச்சலும் ஏற்படும். கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் காரில் தவறான எரிபொருள் நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!