Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நடுக்காட்டில் யானையிடம் சிக்கி கொண்ட பிரபல நடிகர்... புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதால் தப்பினார்... வீடியோ...
பிரபல நடிகர் ஒருவர் காட்டு யானையிடம் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நாம் கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும் தினமும் காட்டு யானை எதிரே வரப்போவதில்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அது நமக்கு பயத்தை ஏற்படுத்தி விடலாம். பிரபல பாடகரும், நடிகருமான விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த பயத்தை அனுபவித்தது போல் தெரிகிறது. ஆம், வன பகுதியில் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது யானை ஒன்று குறுக்கே வந்துள்ளது.
அதன் உருவத்தை வைத்து பார்க்கையில், காருக்குள் இருந்த அனைவரும் நிச்சயம் பயந்திருப்பார்கள் என்பது போலதான் தெரிகிறது. ஆனால் காருக்குள் இருந்தபடியே விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் அங்கு நடந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளனர். காட்டு யானையை நேருக்கு நேராக எதிர்கொண்டபோது, அவர்கள் எதற்காகவும் காரை விட்டு கீழே இறங்கவே இல்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு காரின் நிறை, குறைகள்... விரிவாக விளக்கும் வீடியோ!
அந்த வனப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதை வீடியோவில் உணர முடிகிறது. விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற சிகப்பு கலர் கார், மண் சாலையின் மைய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதை போல் தெரிகிறது. ஆனால் என்ன கார் என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லை.
அனேகமாக இது புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியாக இருக்கலாம். சவால் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி கார்தான் அது. இதற்கிடையே காட்டு யானையை பார்த்த உடனேயே அவர்கள் காரை நிறுத்தி விட்டனர். பின்னர் காருக்கு மிகவும் நெருக்கமாக வந்த யானை, சிறிது நேரம் நோட்டமிட்டு விட்டு, வந்த வழியிலேயே திரும்பி சென்றது.
ஆனால் காட்டு யானை பாதுகாப்பான தொலைவில் சென்று மட்டும்தான் நின்று கொண்டது. காருக்கு வழி விடவில்லை. அத்துடன் இந்த காரால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்பதை காட்டு யானை உடனடியாக உணர்ந்து கொண்டது. இதனால் மீண்டும் காருக்கு முன்னால் வந்து நின்றது. அந்த காரை தாண்டி செல்வதற்கு யானை வழியை தேடியது போல தெரிகிறது.
மண் சாலையின் மைய பகுதியில் கார் நின்று கொண்டிருந்த காரணத்தால், பக்கவாட்டில் இடம் இருப்பதை யானையால் உணர முடியவில்லை. எனினும் பக்கவாட்டில் போதுமான இடம் இருப்பதை சற்று நேரத்தில் யானை உணர்ந்து கொண்டது. இதன்பின் அந்த வழியாக யானை காரை கடந்து, தன்னுடைய வேலையை பார்த்து கொண்டு சென்று விட்டது.
அதன்பின்னர்தான் காருக்குள் இருந்த அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இப்படிப்பட்ட பரபரப்பான ஒரு சூழலில், விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் நாங்கள் ஏற்கனவே கூறியபடி காரை விட்டு கீழே இறங்கவில்லை. அத்துடன் காரை நகர்த்தவும் இல்லை. எதுவும் தவறாக நடக்காது என்ற உறுதியை இது யானைக்கு வழங்கியிருக்கும். எனவே யானை அமைதியாக சென்றிருக்கலாம்.
ஆனால் ஹாரன் அடிப்பது, ஆக்ஸலரேட்டரை உர்... உர்... என உறும வைப்பது போன்ற சேட்டைகளை நாம் செய்தால், அது யானைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடும். எனவே தன்னை பாதுகாத்து கொள்ளும் நோக்கில், யானை நம்மை தாக்க தொடங்கலாம். எனவே வனப்பகுதிகளில் வாகனங்களில் செல்லும் சமயங்களில் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் இருங்கள்.
இந்த சம்பவத்தை எடுத்து கொண்டால் கூட, விஜய் யேசுதாசும், அவரது நண்பர்களும் மகத்தான பொறுமையை காட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலரோ, வன விலங்குகள் வழி விட்டு விடும் என்ற குருட்டு நம்பிக்கையில் வாகனங்களை முன்னோக்கி செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் வன விலங்குகளுக்கு இது பயத்தை ஏற்படுத்தி விடலாம்.
இதன் காரணமாக அவை வாகனங்களை தாக்க தொடங்கி விடும். யானைகள் போன்ற விலங்குகள் மிகவும் வலிமையானவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அவற்றால் கார்களை மிக எளிதாக தாக்க முடியும். வன விலங்குகளை எந்த வழியிலும் தொல்லை செய்யாமல் இருப்பதுதான், அவற்றை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி. அத்துடன் எந்தவிதமான சப்தங்களையும் நாம் எழுப்ப கூடாது.
நமது திடீர் நடவடிக்கைகளோ அல்லது சப்தமோ வன விலங்குகளுக்கு கோபத்தையோ அல்லது பயத்தையோ ஏற்படுத்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காடு என்பது வன விலங்குகளுக்கு சொந்தமானது. நாம்தான் வன விலங்குகளின் இருப்பிடத்திற்கு செல்கிறோம் என்பதை மனதில் வைத்து பொறுமையாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டால் அவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!