Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 3 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா பரவலை தடுக்க ரூ.1 கோடி நிதியை ஒதுக்கிய மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம்..!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க தீவிரமாக பணியாற்றவுள்ளதாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் (ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணி) அறிவித்துள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதற்காக ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தொகையின் மூலம் குறைந்தப்பட்சம் 1,100 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தால் கொண்டுவரப்படவுள்ள இந்த 1,100 படுக்கை வசதிகளும் புனேவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
மேலும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களது இந்த பொருளாதார பங்களிப்பு முழுக்க முழுக்க தற்சமயம் முக்கியமாக தேவைப்படுகின்ற பராமரிப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ நுகர்பொருட்களுக்கு மட்டும் தான் என்றும் உறுதியளித்துள்ளது.
முன்னதாக ஐரோப்பாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் மஹாராஷ்டிரா சகான் நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முக கவசங்களை தயாரிக்கும் பணிகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது.
குறைவான எடையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த முக கவசங்கள் ஃபாக்கிங்கை தடுக்கும் வகையில் இருக்கும். ஒளிபுகும் தாளினால் தயாரிக்கப்படுகின்ற இந்த முக கவசங்களை 6 லிருந்து 8 மணிநேரம் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.
ஃபோக்ஸ்வேகன் தன்னிச்சையாக மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனத்துடன் இணைந்தும் வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையிலான முக கவசங்களை தயாரித்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காப்பிற்கு மட்டுமில்லாமல் இந்த முக கவசங்களை ஐ.சி.யூ நடைமுறைகளின் போதும் உபயோகப்படுத்தலாம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முன்னதாக 35 ஆயிரம் முக கவசங்களை புனேவில் உள்ள அரசு பொது மருத்துவமனை, அவ்ரங்காபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மும்பையில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனைக்கு இந்த கூட்டணி நிறுவனம் வழங்கியிருந்தது.
இவற்றுடன் ஊரடங்கு உத்தரவால் அவ்ரங்காபாத்தில் உள்ள மக்களுக்கு 50,000 உணவு பொட்டலங்களை அன்னமித்ரா அறக்கட்டளை மூலமாக வழங்கும் பணியிலும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
ஜிஎஸ்டி கட்டவேணாம்! ரூ1.26 லட்சம் மிச்சம் பண்ண இந்த காரை இப்படியும் வாங்கலாமா? யாருக்குமே இது தெரியாது!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே