Just In
- 48 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க?
தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு மகன் ஆச்சரிய பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களை பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு புதிய காரை பரிசாக வழங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். நமது நாட்டில் நிறைய வாகனங்களில் அப்பாவின் பரிசு, அம்மாவின் பரிசு என்பது போன்ற ஸ்டிக்கர்களை பார்க்க முடியும். ஆனால் அதே அளவிற்கு பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு வாகனங்களை பரிசளிக்கிறார்களா? என்பது சந்தேகமே.
எனினும் ஒரு சிலர் தங்கள் அப்பாவிற்கு கார்களை பரிசாக வழங்கிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் பலவற்றை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் மகன் ஒருவர் தனது தந்தைக்கு புத்தம் புதிய கியா செல்டோஸ் காரை பரிசாக வழங்கியிருக்கும் செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Jazba Darshan Doshi என்பவரின் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. புதிய கியா செல்டோஸ் காரை பரிசாக வழங்கி அவர் எப்படி தனது தந்தையை ஆச்சரியப்படுத்தினார்? என்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. தனது தந்தையின் 60வது பிறந்த நாளில் இந்த பரிசை அவர் தனது தந்தைக்கு வழங்கியுள்ளார்.
பிறந்த நாள் நிகழ்வை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் புதிய கியா செல்டோஸ் நுழைவதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரிப்பன்களாலும், மலர்களாலும் அந்த கார் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது கருப்பு வண்ண கியா செல்டோஸ் ஆகும்.
அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர், காருக்கு சம்பிரதாயமான சடங்குகளை செய்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே திட்டமிட்டு இந்த பரிசை பிறந்த நாள் கொண்டாடியவருக்கு வழங்கியது போல் தெரிகிறது. ஏனெனில் அவரை அழைப்பதற்கு முன்பாக அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் காரை சூழ்ந்து விட்டனர்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்கே இருந்தனர். சிறிது நேரம் கழித்து, தந்தை கீழே வரும்படி அழைக்கப்பட்டார். கீழே வந்து காரை பார்த்த உடனேயே அவரது முகத்தில் உடனடியாக சந்தோஷம் மலர்கிறது. அப்போது அங்கிருந்த அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் காரின் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர் காரை மகிழ்ச்சியாக ஓட்டுவதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார் செல்டோஸ்தான். ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
தற்போதைய நிலையில் செல்டோஸ் எஸ்யூவி மட்டுமல்லாது, சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவி ஆகிய கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கியா நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!