Just In
- 57 min ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 4 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 6 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 6 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மதுரை மண்ணின் பாசம்... மூணு மாசமா ஸ்கூட்டரை தொடாத வழக்கறிஞர்... காரணத்தை கேட்டு நெகிழும் மக்கள்...
மதுரை வழக்கறிஞர் ஒருவர் மூன்று மாதங்களாக தனது ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்றைய அவசர உலகில் நம்மால் வாகனங்களை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது. அலுவலகத்திற்கு செல்வதாகட்டும் அல்லது காய்கறி வாங்குவதற்கு மார்க்கெட் செல்வதாகட்டும், அனைத்து வேலைகளுக்கும் நமக்கு வாகனங்கள் தேவை. ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் இருந்து நாம் வாகனங்களை பயன்படுத்துவது குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மே மாத தொடக்கம் வரை இந்த ஊரடங்கு மிக கடுமையாக பின்பற்றப்பட்டது. தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
எனினும் மே முதல் வாரத்தில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின. இதனால் அதற்கு பின் வாகன போக்குவரத்து கொஞ்சம் சீரானது. தற்போதும் வாகனங்களை இயக்குவதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், நிலைமை முன்பு போல் கடுமையாக இல்லை. நாம் மீண்டும் ஓரளவிற்கு வாகனங்களை ஓட்ட தொடங்கி விட்டோம்.
ஆனால் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களாக தனது இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே நிறுத்தி வைத்துள்ளார். இதற்கு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணம் கிடையாது. சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டிய காரணத்தால்தான், அவர் 3 மாதங்களாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.
மதுரை உலகனேரி பகுதியை சேர்ந்தவர் அருண் சுவாமிநாதன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். டிவிஎஸ் ஸ்கூட்டி ஸ்கூட்டர் ஒன்றை அவர் வைத்துள்ளார். அந்த ஸ்கூட்டரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியது. ஆனால் அதனை அகற்றுவதற்கு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதனுக்கு மனம் வரவில்லை.
எனவே கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவரது ஸ்கூட்டர் அந்த இடத்திலேயே நின்று கொண்டுள்ளது. அந்த இடத்தை விட்டு அவர் ஸ்கூட்டரை நகர்த்தவே இல்லை. தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது. எனவே தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த மாட்டேன் என வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதனுக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. சிட்டுக்குருவிக்காக ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருக்கும் வழக்கறிஞர் குறித்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்து விட்டது. ஆனால் செல்போன் கதிர்வீச்சு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவி இனம் வேகமாக அழிந்து கொண்டுள்ளது. இந்த சூழலில், சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக தனது டூவீலரை 3 மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான்.
-
காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...