Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் முதல் முறை... சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு கிடைக்கப்போகும் பெருமை...
குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கு மிகப்பெரிய பெருமை ஒன்று கிடைக்கவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தில் ஒற்றுமையின் சிலை அமைந்துள்ள பகுதியில், எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பகுதியாக ஒற்றுமையின் சிலை அமைந்துள்ள பகுதி உருவெடுக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஒற்றுமையின் சிலை பகுதி வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆளுகை ஆணையமும், இந்த பகுதியை வாகன மாசு இல்லாத பகுதியாக மேம்படுத்துவோம் என கூறியுள்ளது. ஒற்றுமையின் சிலை சுற்றியுள்ள பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற முடிவு படிப்படியாக அமலுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் பயணிப்பதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேபோல் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பேருந்துகளும் டீசலுக்கு பதில் பேட்டரி மூலம் இயங்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமையின் சிலை பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை கூறினார். ஆனால் ஒற்றுமையின் சிலை பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கடந்த 2019ம் ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள மக்கள், எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்கு உதவி செய்யப்படும். மேலும் மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒற்றுமையின் சிலை பகுதியில் முதற்கட்டமாக 50 எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களுக்கு ஓட்டுனர்களாக பணியாற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக பெண்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. மேலும் அந்த பகுதியில் ஒர்க் ஷாப் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகரித்து கொண்டே வரும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தீர்வாக பார்க்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவு என்பதால், மக்களும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். எனவே எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!