Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பு ஆலை..! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்..!
ஆசியாவிலேயே மிகப்பெரிய தலைக் கவசம் தயாரிக்கும் ஆலை இந்தியாவில் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கு என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பதில் முக்கிய பங்கு ஹெல்மெட்டுகளுக்கே உள்ளது. இதனால்தான் இந்தியாவில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகளும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இருப்பினும், பெரும்பாலானோர் இந்த விதியைக் கடைப்பிடிப்பதே இல்லை.
இதன் விளைவாக, விபத்தில் சிக்கி இறப்போர்களின் பட்டியலில் இருசக்கர வாகன ஓட்டிகளே முதல் இடத்தில் இருக்கின்றனர். இது, விபத்தில் சிக்கி பேரிழப்பை சந்திப்பவரின் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அத்துறைச் சார்ந்தோருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றது.
எனவே, இந்த தலைக் கவசத்தை அசௌரியம் பாராமல் அணிந்தாமல் அனைவருக்குமே அன்றைய தினம் மிகச் சிறந்ததாக விளங்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹெல்மெட்டுகளை தயாரிக்கும் மிகப்பெரிய உற்பத்தியாலை இந்தியாவில் விரைவில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், இந்தியாவில் விரைவில் அமையவிருக்கும் இந்த ஹெல்மெட் உற்பத்தியாலை ஆசியாவின் மிகப்பெரிய தலைக் கவசம் தயாரிப்பாலையாக அமையாக இருக்கின்றது. இதனை பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் நிறுவனமே தொடங்க இருக்கின்றது.
இதற்காக அந்நிறுவனம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் எனும் நகரத்தைத் தேர்வு செய்துள்ளது. இங்குதான் ஆசியாவின் மிகப்பெரிய தலைக்கவச உற்பத்தியாலை ரூ. 200 கோடி முதலீட்டில் அமையவிருக்கின்றது. சுமார் 5.5 ஏக்கரில் ஏற்கனவே இதற்கான இடம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நியூஸ்18 ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏற்கனவே ரூ. 160 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இங்கு மோட்டார்சைக்கிள்களுக்கான தலைக்கவசம் மட்டுமின்றி சைக்கிளில் பயணிப்போர் பயன்படுத்தும் தலைக்கவசமும் தயாரிக்கப்பட இருக்கின்றது.
அத்துடன், வேறு சில பாதுகாப்பு கவசங்கள் இதே ஆலையில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. எனவேதான் இந்தியாவில் பிரமாண்ட தயாரிப்பாலையை அது அமைய இருக்கின்றது. இந்தியாவில் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோர்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த தயாரிப்புகளுக்கு எப்போதும் இங்கு க்ரீன் சிக்னல்தான்.
எனவேதான் ஸ்டட்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய தலைக்கவசம் தயாரிக்கும் ஆலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்துடன், ஏற்கனவே இருக்கும் உற்பத்தியாலையின் பரப்பளவையும் கூடுதலாக்கும் பணியில் அது இறங்கியிருக்கின்றது. இவையிரண்டையும் ஒட்டுமொத்தமாக சேர்த்தே அந்நிறுவனம் ரூ. 200 கோடியை புதிய முதலீடாக செய்ய இருக்கின்றது.
ஸ்டட்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி நாட்டின் பொருளாதார நிலையையும் கணிசமாக உயர்த்த இது உதவும். இந்த புதிய ஆலையில் வருடம் ஒன்றிற்கு 75 லட்சம் யூனிட் மோட்டார்சைக்கிள்களுக்கான ஹெல்மெட்டுகளும், 15 லட்சம் யூனிட் மிதிவண்டிக்கான ஹெல்மெட்டுகளும் தயாரிக்கப்பட இருப்பதாக ஸ்டட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஸ்டட்ஸ் அக்ஸஸரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சித்தார்த்த பூஷண் குரானா கூறியதாவது, இந்த உற்பத்தியாலை மூலம் நேரடியாக 1,500 பணியாளர்கள் பணியமர்த்தப்ட இருப்பதாக தெரிவித்தார்.
புதிய உற்பத்தியாலையுடன் சேர்த்து ஸ்டட்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் நான்கு தொழிற்சாலையை இயக்கி வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகளே உலகின் பல்வேறு நாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதிச் செய்து வருகின்றது.
குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அந்நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹெல்மெட்டுகளை இந்தியாவில் இருந்து ஏற்றுமதிச் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி எண்ணிக்கை 7 மில்லியனாக உள்ளது. இதனை 14 மில்லியனாக்கும் முயற்சியிலேயே புதிய உற்பத்தியாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட இ ருக்கின்றன.
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!