Just In
- 3 min ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 43 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடுரோட்டில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய துணை ஆணையர்: வைரல் வீடியோ...!
ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக பைக்கை ஓட்டி வந்த துணை ஆய்வாளரை, துணை காவல் ஆணையர் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தியாவில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது குற்றமாகும். இருசக்கர வாகன விபத்தில், பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு, ஹெல்மெட் அணியாமல் இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இருசக்கர வாகனத்தை இயக்குபவரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை. ஆகையால், இதுபோன்ற வாகன ஓட்டிகளின், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாமே...? என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோன்று, ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீஸார்கள் மீதும் இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீஸார் யாரேனும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தால், அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் பைக்கை இயக்கியதாக ராதாகிருஷ்ணன் என்ற போலீஸாருடைய வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ, வாட்ஸ் ஆப்பில் அதிகளவில் வைரலானதை அடுத்து, ராதா கிருஷ்ணன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையிலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த, வீடியோவை பிஹைண்ட் உட்ஸ் ஏர் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த வீடியோவும் காட்டு தீயாய் வைரலாகி வருகின்றது.
வீடியோவில், சீருடை அணிந்த போலீஸார் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு, பைக்கை இயக்கி வந்த துணை ஆய்வாளரை, உதவி காவல் ஆணையர் மடக்கி, நடு ரோட்டில் வைத்தே சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
ஆனால், இவர் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அண்மையில்தான் சென்னை மாநகர காவல் ஆணையர், அரசு அதிகாரிகள், அரசு பணியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த விதி, தற்போது பைக்கை மடக்கிய துணை காவல் ஆணையருக்கும் பொருந்தும். ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், இதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. அதில், சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பது போன்ற உணர்வில் இருக்கின்றனர். இவ்வாறு, செயல்படும் அதிகாரிகளின் செயலை தவிர்க்கும் விதமாக தற்போதைய இந்த நடவடிக்கை உள்ளது.
அதேசமயம், ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கி போலீஸார் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக, இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆகையால், பொதுமக்களுக்கு முன்னோடியாக, அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும், முதலில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இந்த புதிய உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!