Just In
- 19 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 2 hrs ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மத்திய அரசின் திட்டம் சாத்தியமானால் பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50 மட்டுமே! நிதின் கட்கரி பேச்சு
மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால் மத்திய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஆனால் மத்திய அரசு எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இந்த சூழலில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
அப்போது மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக, பெட்ரோல் மற்றும் டீசலை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருந்து விடுபடலாம் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து நிதின் கட்கரி பேசுகையில், ''சட்டீஸ்கர் மாநிலத்தில் விவசாயத்துறை நன்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நெல், கோதுமை, பருப்பு மற்றும் கரும்பு உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. இதன்மூலம் முதன்மையான பயோ எரிபொருள் உற்பத்தி கேந்திரமாக சட்டீஸ்கர் உருவெடுக்க முடியும். இதற்கான மகத்தான ஆற்றல் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு உள்ளது.
விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களுக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிளாண்ட்டில் உருவாக்கப்பட்ட பயோ எரிபொருள் மூலம் சமீபத்தில் டேராடூனில் இருந்து டெல்லிக்கு விமானம் இயக்கப்பட்டது.
பயோ எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட முதல் விமானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மாற்று எரிபொருட்களை சட்டீஸ்கர் மாநிலம் அதிக அளவில் உருவாக்குவதற்கு, இந்த ஆராய்ச்சி மையம் உதவும்.
எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களுக்கு மாறினால், பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியிருக்க வேண்டியது இல்லை. இதன்விளைவாக பெட்ரோல், டீசல் விலை குறையும். நாம் 8 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்கிறோம்.
இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களால் எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருளை உருவாக்க முடியும் என கடந்த 15 ஆண்டுகளாக நான் சொல்லி கொண்டிருக்கிறேன்.
இதன்மூலம் அவர்கள் செல்வ செழிப்பு மிக்கவர்களாகவும் மாற முடியும். எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள், சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் ஆட்டோ ரிக்ஸா, பஸ், டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு அனைத்து விதமான பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
நமது பெட்ரோலிய அமைச்சகமானது 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இங்கு நெல், கோதுமை மற்றும் கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும்'' என்றார்.
பெட்ரோல் மற்றும் டீசலை மத்திய அரசு இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுவும் முதன்மையாக காரணங்களில் ஒன்றாக உள்ளது.
எனவே பெட்ரோல் மற்றும் டீசலை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஆனால் அந்த கோரிக்கையையும் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசலை நம்பியிருக்க வேண்டியதில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்க கூடிய விஷயம்தான்.
நிச்சயமாக இதன்மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து, அதன் விலையும் சரிவடையும். ஆனால் முழுமையாக மாற்று எரிபொருட்களுக்கு மாறுவது என்பது உடனடியாக நடைபெற்று விடக்கூடிய விஷயம் அல்ல. அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.
எனவே தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?