Just In
- 51 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 5 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 6 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இனி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டலாம்! போலீசாரால் எதுவும் செய்ய முடியாது! கோர்ட் தீர்ப்பு!!!
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்ட விரோதம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவு இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்ட விரோதம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த உத்தரவு இந்தியா முழுமைக்கும் பொருந்தும். எனவே இனி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் போலீசாரால், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதுபற்றிய விரிவான செய்தியை பார்க்கலாம்.
நீதிமன்றத்திற்கு அலைபவர்கள் ஏராளம்
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது என்பது இந்தியாவில், தற்போது வரை ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. இதன் காரணமாக பலருக்கு, போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இந்த பிரச்னையில் சிக்கி, வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து கொண்டிருப்பவர்களும் ஏராளம்.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேச வேண்டாம் என்பது போன்ற எச்சரிக்கை பலகைகள் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும். அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பலவும் கூட, இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
லைசென்ஸ் ரத்து
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும் டிரைவர்களின் லைசென்ஸை ரத்து செய்யும்படி, ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் கூட, ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. கடந்த வாரத்தில்தான் இந்த உத்தரவு வெளியானது.
கேரள நீதிமன்றத்தின் அடடே தீர்ப்பு!!
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் முற்றிலும் முரண்பாடாக, அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது கேரள உயர்நீதிமன்றம். ''செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்ட விரோதம் அல்ல'' என்பதுதான் கேரள உயர்நீதிமன்றத்தின் ஆச்சரியப்பட வைக்கும் அடடே தீர்ப்பு.
கேரள மாநிலத்தில் தற்போது வரை, செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது, கேரள போலீஸ் சட்டம் 118 (இ), 1988 மோட்டார் வாகன சட்டம் 184 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இதில், கேரள போலீஸ் சட்டத்தின் 118 (இ) பிரிவு என்ன சொல்கிறது என்றால், ஒரு வாகன ஓட்டி தெரிந்து கொண்டே செய்யும் செயலால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால், அவர் தண்டிக்கப்படலாம்.
இந்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை சந்திக்க நேரிடலாம். அல்லது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம். நேரம் சரியில்லை என்றால், இவை இரண்டுமே சேர்த்து தண்டனையாக கிடைக்க கூடும்!!
1988 மோட்டார் வாகன சட்டம் 184வது பிரிவும் கிட்டத்தட்ட இதையேதான் கூறுகிறது. ஆக, இந்த இரண்டு சட்டங்களிலும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்பது போன்ற வார்த்தைகள் வரவில்லை என கேரள உயர்நீதிமன்றம் கருதுகிறது.
எனவேதான் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது இனிமேல் போலீசாரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.
கொச்சியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவை, கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ச் பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.
பாதிப்பை ஏற்படுத்தாதவரை பிரச்னையில்லை
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது குற்றம் இல்லைதான். அதுவே பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கேரள உயர்நீதிமன்றத்தின் அந்த மற்றொரு உத்தரவு.
அதாவது செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டும்போது, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவரை பிரச்னையில்லை. ஒருவேளை பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டால், சிக்கல்தான்.
மற்றொரு மகிழ்ச்சியான தீர்ப்பு
இதனிடையே இதற்கு முன்னதாக செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கை ரத்து செய்ய அந்தந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகலாம் என்ற மற்றும் ஒரு மகிழ்ச்சியான உத்தரவையும் கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியா முழுமைக்கும் பொருந்தும்
ஒரு மாநில ஐகோர்ட்டின் உத்தரவானது, ஜம்மு காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும். ஒரு வேளை குறிப்பிட்ட ஏதேனும் ஒரு மாநிலத்தின் ஐகோர்ட், அந்த உத்தரவை எதிர்த்தால், அந்த மாநிலத்தில் மட்டும் அந்த உத்தரவை அமல்படுத்துவதில் மாற்றம் ஏற்படலாம்.
இந்த வகையில் பார்த்தால், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவானது, ஜம்மு காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆக, இனிமேல் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால், நாட்டின் எந்த மாநில போலீசாராலும் எதுவும் செய்ய முடியாது.
அதுமட்டுமின்றி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக உங்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களை அணுகலாம்.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
நேரடியாக செல்போன் பயன்படுத்தி அல்ல, ப்ளூடூத் மூலமாக பேசி கொண்டிருந்தவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்துள்ள இந்த தீர்ப்பு நாடு முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த தீர்ப்பு குறித்து கேரள அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்பின் முழுமையான நகல் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
சட்டம் திருத்தி எழுதப்படுகிறது?
அதாவது இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யலாம். அல்லது கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள மற்றொரு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றலாம்.
அது என்ன மற்றொரு வழிகாட்டு முறை என்கிறீர்களா? சட்டத்தில் இடம் இல்லாததால், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாதுதான். ஆனால் அதையும் மீறி வழக்குப்பதிவு செய்ய வேண்டுமானால், சட்டம் திருத்தி எழுதப்பட வேண்டும் என்பதுதான் அந்த வழிகாட்டு நெறிமுறை.
சட்டம் திருத்தியமைக்கப்பட்ட பின், மாநில சட்ட மன்றத்தில், அந்த மசோதா 'பாஸ்' செய்யப்பட வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட போகிறீர்களா?
அப்பாடா, நீதிமன்றமே கூறி விட்டது. இனி செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டலாம் என நினைக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம்.
இந்த உத்தரவு நாடு முழுமைக்கும் என்றாலும் கூட, மற்ற மாநில அரசுகள் இதனை அறிந்து கொண்டு, அமல்படுத்த காலதாமதம் ஏற்படலாம். அல்லது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
அதுமட்டுமின்றி வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், இந்த உத்தரவு குறித்து அறியாமல் உங்களுக்கு அபராதம் விதிக்கலாம். அவருடன் சண்டை போட்டு கொண்டு உங்களுக்கு கால விரயம் ஏற்படலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நமது பாதுகாப்பு என்ற ஒன்று உள்ளது. செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுகையில், கவன சிதறல் ஏற்படும் என்பது உண்மையே. சட்டத்தில் இடம் இல்லை என்பதற்காக, நாம் அதனை செய்யக்கூடாது. நம்மை காத்து கொள்ள வேண்டுமானால், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.