Just In
- 5 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 5 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 8 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?
குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து, புதுக்கோட்டை மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பே சிறுவர்கள் வாகனங்களை இயக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவும் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் 18 வயதை எட்டியவர்களால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பெற முடியும். அதற்கு பிறகுதான் வாகனங்களை இயக்க வேண்டும்.
ஆனால் 10 வயது சிறுவர்கள் கூட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதை காண முடிகிறது. உரிய வயதை எட்டும் முன்பே சிறுவர்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும் சமீப காலமாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
சில சமயங்களில் பெற்றோர்களுக்கு சிறை தண்டனையும் கூட வழங்கப்படுகிறது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கூட, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதில் உள்ள ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் அனைவரையும் சென்று சேரவில்லை. புதுக்கோட்டையில் சமீபத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வார்டுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில், மூன்று சக்கர பேட்டரி பேட்டரி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தினமும் ஒவ்வொரு வார்டாக செல்லும் துப்புரவு பணியாளர்கள், இந்த வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர்.
இதன்படி குப்பைகளை சேகரிப்பதற்காக, புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த நகராட்சி துப்புரவு பணியாளர் பீட்டர் என்பவருக்கு, மூன்று சக்கர பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவரை, அந்த வாகனத்தை ஓட்ட பீட்டர் அனுமதித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சிறுவன், பீட்டரின் உறவினர் ஆவார். தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து இந்த சிறுவன் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அவர் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் இயக்கியதாகவும் கூறப்படுகிறது. துப்புரவு பணியாளர்களிடம் வழங்கப்பட்டுள்ள மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை, அவர்களை தவிர வேறு யாரும் பயன்படுத்த கூடாது என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அப்படி இருக்கும்போது 13 வயது மட்டுமே ஆன சிறுவன், தனது நண்பர்களுடன் அந்த வாகனத்தை ஓட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்கு பைகளை வாங்குவதற்காக பீட்டர் இந்த வாகனத்தில் சிறுவனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் குப்பை அள்ளும் வாகனத்தை சிறுவன் இயக்கியதால், குப்பை சேகரிக்கும் பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா? என மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் துப்புரவு பணிக்கு செல்ல மாட்டேன் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கு வாகனங்களை இயக்குவதில் போதிய அனுபவம் இருக்காது. மேலும் போக்குவரத்து விதிகளை அவர்கள் அறிந்து வைப்பதற்கான மற்றும் பின்பற்றுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு. வயது காரணமாக அவர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதற்கான வாய்ப்புகளோ அதிகம். இவை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!