Just In
- 1 hr ago காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- 3 hrs ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 4 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 4 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
Don't Miss!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை..
- Technology அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
நம்ம ஆளுங்க வேற லெவல்... சென்னையை கலக்கும் கொரோனா ஆட்டோ... இதன் ஸ்பெஷல் என்னனு தெரியுமா?
தமிழக தலைநகர் சென்னையை கொரோனா ஆட்டோ கலக்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கொரோனா வைரசுக்கு தற்போது வரை அதிகாரப்பூர்வ மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
எனவே வரும் முன் காத்து கொள்வதே சிறந்த தீர்வாக இருக்கும். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாததாலும், அலட்சியம் காரணமாகவும், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிலைகுலைந்து போயுள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவில் பாதிப்புகள் மிக அதிகமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்பும் கொரோனா கட்டுக்குள் வராததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வதுதான் நமக்கு தற்போது இருக்கும் ஒரே வழியும் கூட. ஆனால் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ஒரு சிலர் தேவையே இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு இல்லாததே இதற்கு காரணம். கொரோனாவின் தீவிரத்தை அவர்கள் உணரவில்லை. எனவே அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கினர். இதன் ஒரு பகுதியாக சென்னையில் காவல் துறை அதிகாரி ஒருவர் கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த ஹெல்மெட் கோவிட்-19 வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் காவல் துறையினர், கொரோனா வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா ஹெல்மெட் தவிர, கொரோனா கார் வடிவமைக்கப்பட்ட சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தெலங்கானா நகரில் இந்த வித்தியாசமான கார் வடிவமைக்கப்பட்டது. கொரோனா கார் வரிசையில், தற்போது கொரோனா ஆட்டோரிக்ஸாவும் இணைந்துள்ளது.
தமிழக தலைநகர் சென்னையில்தான் இந்த கொரோனா ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் கோவிட்-19 வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழக அளவில் பார்த்தால், சென்னைதான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சென்னையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸை கருப்பொருளாக கொண்டு, கலைஞர் ஒருவர் ஆட்டோரிக்ஸா ஒன்றை மாடிபிகேஷன் செய்துள்ளார். கோவிட்-19 வைரஸின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஆட்டோரிக்ஸா மூலம் சென்னை வீதிகளில், கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அந்த ஆட்டோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த ஆட்டோ மூலம் மக்களுக்கு முக கவசங்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த ஆட்டோவின் சிறப்பம்சங்களில் ஒன்று.
-
சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்