Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...
மிகப்பெரிய தொகையை காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ள சூழலில், அதற்கான காரணத்தை கேட்டு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஆடிப்போயுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். சில சமயங்களில் கைககளில் எழுதி ரசீது கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து இ-சலான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டிலுமே காவல் துறையினர் சில சமயங்களில் குளறுபடிகளை செய்து விடுகின்றனர்.
அதாவது கார் ஓட்டும்போது தலை கவசம் அணியவில்லை, இரு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை என காரணங்களை தவறாக குறிப்பிட்டு அபராத ரசீதுகளையும், இ-சலான்களையும் வழங்குகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நிகழ்ந்துள்ள சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது ஒரு குளறுபடி நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வாகரன். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, செல்வாகரனின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக செல்வாகரனுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அதாவது இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றது, அதிவேகமாக பயணித்தது மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி பயணம் செய்தது ஆகிய காரணங்களுக்காக 1,600 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதில், குளறுபடி என்னவெனில் இந்த போக்குவரத்து விதிமுறை மீறல்களில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தது செல்வாகரனின் ஆட்டோ பதிவு எண் ஆகும்.
குலசேகரம் காவல் துறையினர்தான் இந்த குளறுபடியை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்வாகரன் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக எனது ஆட்டோ நீண்ட காலமாக வீட்டில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கும் போது நான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசேகரம் பகுதிக்கு நான் சென்றதாக கூறி எனக்கு அபராதம் விதித்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக நான் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எனக்கு விதிக்கப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை பெரிய அபராத தொகை ஆகும். எனவே காவல் துறையினர் இந்த குளறுபடியை நிவர்த்தி செய்ய வேண்டும்'' என்றார். உண்மையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தற்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதில் சொந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
எனவே ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதிய அளவு சவாரியும், வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு காவல் துறையினர் குளறுபடியாக அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...