Just In
- 8 min ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 2 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 3 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 5 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
Don't Miss!
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Movies ஆடு ஜீவிதம் அந்த ஒரு நிர்வாணக் காட்சிக்காகவே தேசிய விருது கொடுக்கணும்.. ரசிகர்கள் ரெக்வஸ்ட்!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...
மிகப்பெரிய தொகையை காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ள சூழலில், அதற்கான காரணத்தை கேட்டு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஆடிப்போயுள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். சில சமயங்களில் கைககளில் எழுதி ரசீது கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து இ-சலான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டிலுமே காவல் துறையினர் சில சமயங்களில் குளறுபடிகளை செய்து விடுகின்றனர்.
அதாவது கார் ஓட்டும்போது தலை கவசம் அணியவில்லை, இரு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை என காரணங்களை தவறாக குறிப்பிட்டு அபராத ரசீதுகளையும், இ-சலான்களையும் வழங்குகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நிகழ்ந்துள்ள சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது ஒரு குளறுபடி நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வாகரன். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, செல்வாகரனின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக செல்வாகரனுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அதாவது இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றது, அதிவேகமாக பயணித்தது மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி பயணம் செய்தது ஆகிய காரணங்களுக்காக 1,600 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதில், குளறுபடி என்னவெனில் இந்த போக்குவரத்து விதிமுறை மீறல்களில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தது செல்வாகரனின் ஆட்டோ பதிவு எண் ஆகும்.
குலசேகரம் காவல் துறையினர்தான் இந்த குளறுபடியை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்வாகரன் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக எனது ஆட்டோ நீண்ட காலமாக வீட்டில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கும் போது நான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசேகரம் பகுதிக்கு நான் சென்றதாக கூறி எனக்கு அபராதம் விதித்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக நான் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எனக்கு விதிக்கப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை பெரிய அபராத தொகை ஆகும். எனவே காவல் துறையினர் இந்த குளறுபடியை நிவர்த்தி செய்ய வேண்டும்'' என்றார். உண்மையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தற்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதில் சொந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
எனவே ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதிய அளவு சவாரியும், வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு காவல் துறையினர் குளறுபடியாக அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு