Just In
- 3 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 5 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 7 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 10 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்! விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்
நாமக்கல் உணவக உரிமையாளர் செய்த சபதத்திற்காக, காரைக்குடி மக்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வாகன பயன்பாடு குறைந்துள்ளது. ஒரு சிலர் பல மாதங்களாக வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இப்படி நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாகனங்களில், கூடு கட்டி வசிப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன.
இதன்படி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டரில், சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியது. இதன் காரணமாக சுமார் 3 மாதங்களாக அவர் ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வந்தார். சிட்டுக்குருவிக்காக வழக்கறிஞர் ஒருவர் ஸ்கூட்டரை 3 மாதங்களாக தியாகம் செய்த தகவல், கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கு அடுத்தபடியாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரிலும் சமீபத்தில் பறவை ஒன்று கூடு கட்டியது. எனவே பறவைக்கு எவ்விதமான தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்த காரை சுற்றிலும் துபாய் பட்டத்து இளவரசர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார்.
மேலும் அந்த காருக்கு அருகே யாரும் செல்லக்கூடாது என அதிரடியாக உத்தரவும் பிறப்பித்தார். இதேபோல் தமிழகத்தில் மீண்டும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. கரிச்சான் குருவி அடைகாப்பதற்காக உணவக உரிமையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்றுள்ள இச்சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவரின் ஸ்கூட்டரில்தான் கரிச்சான் குருவி கூடு கட்டியுள்ளது. 37 வயதாகும் இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், காரைக்குடியில் உணவகம் ஒன்றை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த உணவகத்தை நண்பர்களுடன் சேர்ந்து திறக்க கோபால் முடிவு செய்துள்ளார்.
இதனால் காரைக்குடி ராம் நகர் அருகே இருக்கும் உதயம் நகர் என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையாலும், கொரோனா வைரஸ் அச்சத்தாலும் வாகன பயன்பாடு முற்றிலுமாக குறைந்து போயிருந்தது. இதன்படி கோபாலும் தன்னுடைய ஸ்கூட்டரை அதிகம் பயன்படுத்தவில்லை.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது ஸ்கூட்டரை பயன்படுத்துவது கோபாலின் வழக்கம் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகம் பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அதன் முன் பகுதியில் கரிச்சான் குருவி கூடு கட்டியது. இதை பார்த்த கோபாலுக்கு கரிச்சான் குருவியின் கூட்டை கலைப்பதற்கு மனம் வரவில்லை. எனவே அதனை அப்படியே விட்டு விட்டார்.
மேலும் தனது ஸ்கூட்டரில் கரிச்சான் குருவி கட்டிய கூட்டின் மேற்புறத்தில் துணி ஒன்றையும் அவர் கட்டினார். மற்ற பறவைகளால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் இதனை செய்துள்ளார். இதுதவிர தினமும் குருவிக்கு தண்ணீரும் வைத்து வருகிறார். இதற்கு இடையே அந்த குருவி மூன்று முட்டைகளை இட்டு அடை காத்து வந்தது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மூன்று முட்டைகளில் இருந்தும் கரிச்சான் குருவி குஞ்சுகளை பொறித்தது. குருவி கூடு கட்டிய காரணத்தால் கடந்த ஒன்றரை மாதமாக கோபால் தனது ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கடைகளுக்கு செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு அவர் நடந்து செல்வதை பழக்கமாக்கி கொண்டுள்ளார்.
இதை கேள்விப்பட்ட காரைக்குடி பகுதி மக்கள் கோபாலை மனதார பாராட்டி வருகின்றனர். குருவி குஞ்சுகள் சிறகுகள் முளைத்து பறக்கும் வரை ஸ்கூட்டரை எடுக்கப்போவதில்லை என கோபால் சபதம் ஏற்றுள்ளார். அதன்பிறகுதான் அவர் ஸ்கூட்டரை எடுக்க திட்டமிட்டுள்ளார். நம்மால் இன்றைய சூழலில் வாகனங்கள் இல்லாமல் நிச்சயம் இருக்கவே முடியாது.
நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட வாகனங்களை பயன்படுத்தி நாம் பழகி விட்டோம். அப்படி இருக்கையில் குருவிகளுக்காக தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ள கோபால் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இந்த நிகழ்வு குறித்து இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரிலியா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!